பதிவு செய்த நாள்
03 செப்2020
00:58
புதுடில்லி:தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான,‘ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ்’, வரும், 7ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், \\\
702 கோடி ரூபாய் நிதியை, புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட உள்ளது. இதையடுத்து, புதிய பங்கு வெளியீட்டை, 7ம் தேதியிலிருந்து, 9ம் தேதி வரை மேற்கொள்ள இருப்பதாகவும், ஒரு பங்கின் விலை, 165 – 166 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.
இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, 110 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் வசம் இருக்கும், 3.56 கோடி பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க திட்டமிட்டுள்ளது.இதில், நிறுவனர் அசோக் சூட்டாவின், 8.14 லட்சம் பங்குகளும்; தனியார் பங்கு முதலீட்டு பண்டான சி.எம்.டி.பி.,– 2 உடைய வசம் இருக்கும், 27.25 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
அசோக் சூட்டா, மைண்டுட்ரீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், விப்ரோ நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.பங்குகள், குறைந்தபட்சம், 90 அல்லது அதன் மடங்குகளில் விற்பனை செய்யப்படும். ஒரு பங்கின் முக விலை, 2 ரூபாய் ஆகும்.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, பொதுவான நிர்வாகச் செலவுகளுக்கும், நீண்டகால செயல்பாட்டு மூலதன தேவைகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.பெங்களூருவை தலைமையகமாக கொண்ட இந்த நிறுவனம், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் மற்றும் நோமுரா பைனான்ஷியல் அட்வைஸரி அண்டு செக்யூரிட்டீஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|