பதிவு செய்த நாள்
03 செப்2020
01:03
புதுடில்லி:காப்பீட்டு நிறுவனங்கள், ‘ஐலிப் பாலிசிகள்’ என்று அழைக்கப்படும், பங்குச் சந்தை குறியீடுகள் அல்லது அரசு பத்திரங்களுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களை வழங்குவது குறித்து ஆராய, ஒரு குழுவை, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அமைத்துள்ளது.
தற்சமயம் இப்படி சென்செக்ஸ், நிப்டி போன்ற குறியீடுகளுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களை, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அனுமதிப்பதில்லை. இந்நிலையில், பல ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தை குறியீடுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களை அனுமதிக்க கோரி கோரிக்கை வைத்து வந்தன.இதையடுத்து, இத்தகைய திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக, 6 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை, ஐ.ஆர்.டி.ஏ..ஐ., அமைத்து அறிவித்துள்ளது.
தற்போது, ஆயுள் காப்பீடுகளில் பழமையான காப்பீட்டு திட்டங்கள் மற்றும், ஒரு பகுதியை காப்பீட்டுக்கு ஒதுக்கி, மீதியை நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யும்,‘யுலிப் பாலிசிகள்’ ஆகிய இரண்டு திட்டங்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில், அரசு பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தை குறியீடுகளுடன் இணைக்கப்படும் திட்டங்களில் இருக்கும் சாதக பாதக அம்சங்கள் குறித்து, இந்த ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு ஆராய்ந்து, இரண்டு மாதங்களில் அறிக்கை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|