பதிவு செய்த நாள்
03 செப்2020
22:08
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கொரோனா தொற்று பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடுமையான பாதிப்பை சந்தித்து வந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
உயர்வு
'ஐ.எச்.எஸ் - மார்க்கிட் இந்தியா' நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த ஜூலை மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், 'ஐ.எச்.எஸ் - மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,' குறியீடு, 34.2 புள்ளிகளாக குறைந்திருந்தது.இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 41.8 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. எனவே ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, ஆகஸ்ட்டில் சற்று வளர்ச்சி காணப்பட்டு உள்ளது.
'ஐ.எச்.எஸ் - மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,' குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், வளர்ச்சியையும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவையும் குறிக்கும்.எனவே, ஆகஸ்ட் மாத நிலையும் சரிவை குறிக்கும் வகையில் தான் உள்ளது. ஆனால், ஜூலை நிலையை விட உயர்ந்துள்ளது.
அதிகரிப்பு
ஆகஸ்ட் மாதமும் சேவைகள் துறைக்கு சவாலான மாதமாகவே இருந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகள் மூடப்பட்டிருந்தது மற்றும் ஊரடங்கு நிலைமைகள் ஆகியவை, இத்துறையின் வளர்ச்சியை பாதித்துள்ளது.மேலும், புதிய ஆர்டர்கள் மற்றும் உற்பத்தி ஆகியவையும் தொடர்ந்து குறைந்தே வருகிறது.
மேலும், ஊரடங்கு உள்ளிட்ட தடைகள் காரணமாக, திட்டங்களை உரிய நேரத்தில் முடிக்க இயலாமல் போகிறது.இந்திய சேவைகள் துறை,அதன் முழு திறனில் செயல்படாத காரணத்தால், நிறுவனங்கள், தொடர்ந்து ஆறாவது மாதமாக வேலைவாய்ப்புகளை குறைத்து வருவதாக அறிவித்து வருகின்றன.
விலையை பொறுத்தவரை, வருவாய் இழப்பு, அதிக செலவுகள் காரணமாக, மார்ச் மாதத்துக்கு பிறகு, முதல் முறையாக கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன உற்பத்தி மற்றும் சேவை துறை இரண்டும் சேர்ந்த, 'கலப்பு பி.எம்.ஐ.,' குறியீடு, ஜூன் மாதத்தில், 37.2 புள்ளிகளாக இருந்தது.இது, தற்போது ஆகஸ்ட் மாதத்தில், 46 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இதுவும் சரிவைக் குறிக்கும், 50 புள்ளிகளுக்கு கீழே தான் உள்ளது.ஆகஸ்ட் மாதத்துக்கான ஆய்வில், மீட்சிக்கான சாத்தியங்களின் அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இதற்கு முந்தைய மாதங்களில் இருந்த எதிர்மறை வணிக உணர்வுகள் மாறி வந்துள்ளது. வேலையிழப்பும், மார்ச் மாதத்துக்கு பிறகு இருந்த நிலையிலிருந்து மெதுவாக குறைந்து வருகிறது.
ஸ்ரேயா படேல் பொருளாதார நிபுணர், ஐ.எச்.எஸ் - மார்க்கிட்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|