பதிவு செய்த நாள்
04 செப்2020
12:08
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் கடைசி நாளில் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி உடன் வர்த்தகத்தை துவங்கியது.
அமெரிக்க பங்குச்சந்தைகளில் நேற்று ஏற்பட்ட வீழ்ச்சி, அதனைத் தொடர்ந்து, ஆசிய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தது போன்ற காரணங்களாலும், உள்நாட்டில் முக்கிய நிறுவன பங்குகள் அதிக சரிவை சந்தித்ததாலும் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 579.74 புள்ளிகள் சரிந்து 38,411.20ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 166.10 புள்ளிகள் சரிந்து 11,361.35ஆகவும் வர்த்தகமாகின. காலை 11.45 மணியளவில் சென்செக்ஸ் 475, நிப்டி 132 புள்ளிகள் சரிந்து வர்த்தமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தபோதிலும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.73.33ஆக வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|