பதிவு செய்த நாள்
06 செப்2020
02:13
புதுடில்லி:அரசுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம், அதன் குறிப்பிட்ட அளவிலான பங்குகளை, ஊழியர்களுக்கு, சந்தை விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தை தனியார்மயமாக்க உள்ளதை அடுத்து, ஊழியர்களுக்கு இந்த வெகுமதி வழங்கப்பட உள்ளது.2 சதவீத பங்குகள்சலுகை விலையில் ஊழியர்களுக்கு பங்குகளை வழங்குவதற்கு, நிர்வாக குழு வெள்ளிக்கிழமையன்று அனுமதி வழங்கியதாக, பாரத் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.பி.பி.சி.எல்., அறக்கட்டளை வசம், சந்தையிலிருந்து பெறப்பட்ட, 9.33 சதவீத பங்குகள் உள்ளன. இதிலிருந்து, 2 சதவீத பங்குகள் ஊழியர்களுக்கு சகாய விலையில் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
இதனால், அரசு வசம் இருக்கும் நிறுவனத்தின் பங்குகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. அரசு தன் வசம் இருக்கும், 52.8 சதவீத பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்ய இருக்கிறது. இருப்பினும், பி.பி.சி.எல்., வசம் இருக்கும் மீதி, 7.33 சதவீத பங்கு களை என்ன செய்வது என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் செய்யப்படவில்லை.
ஓர் ஆண்டுசகாய விலை திட்டத்தில் வழங்கப்படும் பங்குகள், ஊழியர்களின் பதவி உள்ளிட்ட வற்றைப் பொறுத்து வழங்கப்படும் என தெரிகிறது.மேலும், இப்பங்குகளை வாங்கும் ஊழியர்கள், அதை ஓர் ஆண்டு முடியும் வரை விற்பனை செய்ய முடியாது.கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை யில், இந்நிறுவன பங்குகள் விலை, 403.40 ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|