சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சிசென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி ... அமெரிக்க டாலர்  ஆதிக்கம் நீடிக்குமா அமெரிக்க டாலர் ஆதிக்கம் நீடிக்குமா ...
ஊழியர்களுக்கு சகாய விலையில் பாரத் பெட்ரோலிய பங்குகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2020
02:13

புதுடில்லி:அரசுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம், அதன் குறிப்பிட்ட அளவிலான பங்குகளை, ஊழியர்களுக்கு, சந்தை விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தை தனியார்மயமாக்க உள்ளதை அடுத்து, ஊழியர்களுக்கு இந்த வெகுமதி வழங்கப்பட உள்ளது.2 சதவீத பங்குகள்சலுகை விலையில் ஊழியர்களுக்கு பங்குகளை வழங்குவதற்கு, நிர்வாக குழு வெள்ளிக்கிழமையன்று அனுமதி வழங்கியதாக, பாரத் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.பி.பி.சி.எல்., அறக்கட்டளை வசம், சந்தையிலிருந்து பெறப்பட்ட, 9.33 சதவீத பங்குகள் உள்ளன. இதிலிருந்து, 2 சதவீத பங்குகள் ஊழியர்களுக்கு சகாய விலையில் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

இதனால், அரசு வசம் இருக்கும் நிறுவனத்தின் பங்குகளில் எந்த மாற்றமும் ஏற்படாது. அரசு தன் வசம் இருக்கும், 52.8 சதவீத பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்ய இருக்கிறது. இருப்பினும், பி.பி.சி.எல்., வசம் இருக்கும் மீதி, 7.33 சதவீத பங்கு களை என்ன செய்வது என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் செய்யப்படவில்லை.

ஓர் ஆண்டுசகாய விலை திட்டத்தில் வழங்கப்படும் பங்குகள், ஊழியர்களின் பதவி உள்ளிட்ட வற்றைப் பொறுத்து வழங்கப்படும் என தெரிகிறது.மேலும், இப்பங்குகளை வாங்கும் ஊழியர்கள், அதை ஓர் ஆண்டு முடியும் வரை விற்பனை செய்ய முடியாது.கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை யில், இந்நிறுவன பங்குகள் விலை, 403.40 ரூபாயாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)