பதிவு செய்த நாள்
07 செப்2020
02:41
‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை போலவே, ஏ.டி.எம்., இயந்திரங்களில் இருந்து, கார்டு இல்லாமலே பணம் எடுத்துக் கொள்ளும் வசதியும் பிரபலமாகி வருகிறது. ‘கார்ட்லெஸ் கேஷ் வித்டிராயல்’ என குறிப்பிடப்படும் இந்த வசதி, கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பாதுகாப்பு நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது, இந்த வசதியை பல்வேறு வங்கிகளும் அளிக்கத் துவங்கியிருக்கின்றன. மொபைல் போன் செயலி மூலம் இயங்கும் இந்த வசதி எளிதாக அமைவதோடு, பாதுகாப்பிற்கும் கைகொடுப்பதாக கருதப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்தும் வழிமுறைகள் வருமாறு:
செயலி வசதி:
ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளிட்டவை, கார்ட்லெஸ் கேஷ் வித்டிராயல் வசதியை அளிக்கின்றன. இந்த வசதியை செயல்படுத்தும் முறை வங்கிக்கு வங்கி வேறுபட்டாலும், வங்கியின் செயலி மூலம் இயங்குவது பொதுவான அம்சமாக அமைகிறது. இதன் மூலம், ஏ.டி.எம்., கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்.
செயல்முறை:
இந்த வசதியை பயன்படுத்த, முதலில் ஏ.டி.எம்., கார்டு உள்ள வங்கியின் மொபைல் செயலியை நிறுவிக்கொள்ள வேண்டும். அதன் பின், பணம் எடுக்கும் போது, இந்த செயலியில் இதற்கென உள்ள வாய்ப்பை தேர்வு செய்து, தேவைப்படும் தொகையை குறிப்பிட வேண்டும். பின், பாஸ்வேர்டை டைப் செய்தால், பரிவர்த்தனைக்கான ஒரு முறை பாஸ்வேர்டு வரும்.
பாஸ்வேர்டு:
பதிவு செய்ய மொபைலுக்கு வரும் ஒரு முறை பாஸ்வேர்டை பின் எண்ணாக பயன்படுத்தி, ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாஸ்வேர்டு, குறிப்பிட்ட காலம் வரையே செல்லும். ஒரே வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மட்டும் தான், இந்த வசதியை பயன்படுத்த முடியும். பிற வங்கி ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்க முடியாது.
பரிவர்த்தனை அளவு: இந்த முறையில் பணம் எடுக்க, தினசரி பரிவர்த்தனை வரம்பு பொருந்தும். இந்த வரம்பு, வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள், இந்த வசதிக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு அம்சம்:
மேலும் பல வங்கிகள், இந்த வசதியை அறிமுகம் செய்து வருகின்றன. கார்டு மூலம் பணம் எடுப்பதை விட, பின் எண் கொண்டு, மொபைல் செயலி மூலம் பணம் எடுப்பது பாதுகாப்பானது என, சைபர் வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|