டிஜிட்டல் கோல்டு’  முதலீடு  செய்வது எப்படி?டிஜிட்டல் கோல்டு’ முதலீடு செய்வது எப்படி? ...  நிதி நெருக்கடியில் இந்திய குடும்பங்கள் நிதி நெருக்கடியில் இந்திய குடும்பங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஏ.டி.எம்., கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியின் முக்கிய அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2020
02:41

‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை போலவே, ஏ.டி.எம்., இயந்திரங்களில் இருந்து, கார்டு இல்லாமலே பணம் எடுத்துக் கொள்ளும் வசதியும் பிரபலமாகி வருகிறது. ‘கார்ட்லெஸ் கேஷ் வித்டிராயல்’ என குறிப்பிடப்படும் இந்த வசதி, கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பாதுகாப்பு நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.


தற்போது, இந்த வசதியை பல்வேறு வங்கிகளும் அளிக்கத் துவங்கியிருக்கின்றன. மொபைல் போன் செயலி மூலம் இயங்கும் இந்த வசதி எளிதாக அமைவதோடு, பாதுகாப்பிற்கும் கைகொடுப்பதாக கருதப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்தும் வழிமுறைகள் வருமாறு:


செயலி வசதி:


ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளிட்டவை, கார்ட்லெஸ் கேஷ் வித்டிராயல் வசதியை அளிக்கின்றன. இந்த வசதியை செயல்படுத்தும் முறை வங்கிக்கு வங்கி வேறுபட்டாலும், வங்கியின் செயலி மூலம் இயங்குவது பொதுவான அம்சமாக அமைகிறது. இதன் மூலம், ஏ.டி.எம்., கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்.


செயல்முறை:



இந்த வசதியை பயன்படுத்த, முதலில் ஏ.டி.எம்., கார்டு உள்ள வங்கியின் மொபைல் செயலியை நிறுவிக்கொள்ள வேண்டும். அதன் பின், பணம் எடுக்கும் போது, இந்த செயலியில் இதற்கென உள்ள வாய்ப்பை தேர்வு செய்து, தேவைப்படும் தொகையை குறிப்பிட வேண்டும். பின், பாஸ்வேர்டை டைப் செய்தால், பரிவர்த்தனைக்கான ஒரு முறை பாஸ்வேர்டு வரும்.


பாஸ்வேர்டு:


பதிவு செய்ய மொபைலுக்கு வரும் ஒரு முறை பாஸ்வேர்டை பின் எண்ணாக பயன்படுத்தி, ஏ.டி.எம்., இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாஸ்வேர்டு, குறிப்பிட்ட காலம் வரையே செல்லும். ஒரே வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தில் மட்டும் தான், இந்த வசதியை பயன்படுத்த முடியும். பிற வங்கி ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்க முடியாது.


பரிவர்த்தனை அளவு: இந்த முறையில் பணம் எடுக்க, தினசரி பரிவர்த்தனை வரம்பு பொருந்தும். இந்த வரம்பு, வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள், இந்த வசதிக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


பாதுகாப்பு அம்சம்:


மேலும் பல வங்கிகள், இந்த வசதியை அறிமுகம் செய்து வருகின்றன. கார்டு மூலம் பணம் எடுப்பதை விட, பின் எண் கொண்டு, மொபைல் செயலி மூலம் பணம் எடுப்பது பாதுகாப்பானது என, சைபர் வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)