பதிவு செய்த நாள்
07 செப்2020
02:42
கொரோனா
தாக்கத்தால், பெரும்பாலான இந்திய குடும்பங்கள் தங்கள் நிதி இலக்குகளை
மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அமல் செய்யப்பட்ட பொது முடக்கம், பொருளாதார
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, வேலையிழப்பு மற்றும் ஊதியம் குறைப்பு
போன்ற பாதிப்பையும் உண்டாக்கியுள்ளது.இந்நிலையில், நிதி ஆலோசனை நிறுவனமான,
‘அர்தா எந்திரா’ நடத்திய ஆய்வு, கொரோனா தாக்கத்திற்கு பின், இந்தியர்களின்
நில ஆரோக்கிய மதிப்பெண், 354ல் இருந்து, 284 ஆக குறைந்திருப்பதாக
தெரிவிக்கிறது.
இந்த மதிப்பெண், 300க்கு மேல் இருந்தால் நிதி ஆரோக்கியம்
சராசரியாக இருப்பதாகவும், அதற்கும் கீழ் இருந்தால் நிதி நெருக்கடி
நிலவுவதாகவும் கருதப்படுகிறது.இந்திய குடும்பங்கள் பணப்புழக்க சிக்கலை
எதிர்கொள்வதோடு, பலரும் தங்கள் நிதி இலக்குகளை மறுபரிசீலனை செய்யும் நிலை
ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை இழக்கும் நிலை ஏற்பட்டால்,
பெரும்பாலானோரால் ஆறு மாதத்திற்கு மேல் நிலைமையை சமாளிக்க முடியாது
என்றும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. போதிய அவசர கால நிதி இல்லாததே
இதற்கு காரணம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|