பதிவு செய்த நாள்
08 செப்2020
22:34
புதுடில்லி:அடுத்த மூன்று மாதங்களில், வெறும் 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே, புதிதாக ஊழியர்களை சேர்க்க திட்டமிட்டிருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்து உள்ளது. மேன்பவர் குரூப் நிறுவனம், பணியமர்த்தும் முடிவுகள் குறித்து, 813 நிறுவனங்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வு அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் ஆட்களை எடுக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்து உள்ளது. 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ஊழியர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளன.இது கடந்த, 15 ஆண்டுகளில் இல்லாத நிலையாகும்.
ஊதிய உயர்வை பொறுத்தவரை, 7 சதவீத நிறுவனங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளன. 3 சதவீத நிறுவனங்கள் குறையும் என்றும்; 54 சதவீத நிறுவனங்கள் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கருதுகின்றன.வேலை வழங்குவது குறித்த எண்ணம், சிறிய நிறுவனங்களில் அதிகளவில் உள்ளது. இதையடுத்து, நடுத்தர நிறுவனங்களில் ஓரளவும்; பெரிய நிறுவனங்களில் குறைவாகவும் உள்ளது.
மேலும் இத்தகைய எண்ணம், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகமாகவும், மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குறைவாகவும் உள்ளது.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|