பதிவு செய்த நாள்
09 செப்2020
22:03
புதுடில்லி:நிறுவனங்கள், தங்கள் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கான அவகாசத்தை நீட்டித்து அறிவித்துள்ளது.கடந்த நிதியாண்டுக்கான ஆண்டு பொதுக் குழு கூட்டத்தை, நிறுவனங்கள் கூட்டுவதற்கான அவகாசத்தை, கொரோனா தாக்கம் காரணமாக, டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அவகாசம்
நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம், இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கு மாறு, நிறுவனங்களின் பதிவாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.அவகாசம் கேட்டு ஏற்கெனவே விண்ணப்பித்திருந்து, அனுமதி கிடைக்காத அல்லது நிராகரிக்கப்பட்டவர் களுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, செப்டம்பர் 30ம் தேதியிலிருந்து, டிசம்பர் 31ம் தேதி வரை, ஆண்டு பொதுக் குழு கூட்டத்தை நடத்திக் கொள்வதற்கான அவகாசம், கிட்டத்தட்ட, 12 லட்சம் நிறுவனங்களுக்கு கிடைத்து உள்ளது.கோரிக்கைகள்கொரோனா பாதிப்புகள் காரணமாக, ஆண்டு பொதுக் குழு கூட்டத்தை நடத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தருமாறு, பல்வேறு சங்கங்கள் மூலமாக அரசுக்கு கோரிக்கைகள் வந்ததை அடுத்து, அமைச்சகம் இந்த முடிவை எடுத்து உள்ளது.இதனையடுத்து, லட்சக்கணக்கான சிறு நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|