பதிவு செய்த நாள்
10 செப்2020
21:32
மும்பை:மாநிலங்களுக்கு, வழங்க வேண்டிய முழு ஜி.எஸ்.டி., இழப்பீட்டை மத்திய அரசு செலுத்தாமல் இருப்பது, மாநிலங்களின் நடப்பு நிதியாண்டின் மூலதன செலவில், 3 லட்சம் கோடி வரை வெட்டு விழ காரணமாக அமையும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துஉள்ளது.
குறைப்பு
மத்திய அரசு இழப்பீடு வழங்காத நிலையில், அந்த பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கும்போது, அது மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை, 4.25 – 5.52 சதவீதம் அளவுக்கு உயர வழிவகுக்கும் என்றும், இக்ரா தெரிவித்துள்ளது.
மூலதன செலவுகளை உயர்த்த மாநிலங்களுக்கு விருப்பம் இருந்தாலும், ஜி.எஸ்.டி., இழப்பீடு மற்றும் சி.டி.டி., எனும், மத்திய வரி பகிர்வு ஆகியவை கிடைக்காத பட்சத்தில், நடப்பு நிதியாண்டில், மாநிலங்கள் தங்கள் மூலதன செலவில், 1 – 3.4 லட்சம் கோடி ரூபாய் வரை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இழப்பீடு
அரசாங்கத்தின் செலவுகளில், மூலதன செலவுகள் மிகவும் பயனுள்ள செலவாகும். இந்த செலவுகள் மூலம் அதிகம் நன்மை கிடைக்கும். இந்நிலையில், ஜி.எஸ்.டி., இழப்பீடு கிடைக்காத நிலையில், அதிகளவில் மூலதன செலவுகளுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்படும் என்றும், இக்ரா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|