மாநிலங்களின் மூலதன செலவுகள் குறைக்கும் நிலை ஏற்படக்கூடும் மாநிலங்களின் மூலதன செலவுகள் குறைக்கும் நிலை ஏற்படக்கூடும் ... நாட்டின் பொருட்கள்  ஏற்றுமதி 13.35 சதவீதம் அதிகரிப்பு நாட்டின் பொருட்கள் ஏற்றுமதி 13.35 சதவீதம் அதிகரிப்பு ...
அமேசானுக்கு பங்குகளை விற்க ரிலையன்ஸ் முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2020
21:34

புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் சில்லரை விற்பனை வணிகத்தில், 40 சதவீதம் அளவுக்கு அமேசானுக்கு விற்பனை செய்ய ஆர்வமாக இருப்பதாக, சந்தை செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து விபரமறிந்த நபர் கூறியதாவது:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஜியோ பிளாட்பார்ம் வணிகத்தில் முதலீடுகளை திரட்டியதை அடுத்து, சில்லரை விற்பனை வணிகத்திலும் முதலீடுகளை திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது.

இதன் காரணமாக, அண்மையில், 'சில்வர் லேக் பார்ட்னர்ஸ்' நிறுவனம், 7,500 கோடி ரூபாயை, இப்பிரிவில் முதலீடு செய்தது.பேச்சுஇந்நிலையில், அமேசானுக்கு, 40 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியில் ரிலையன்ஸ் இறங்கி இருக்கிறது. இதன் மூலம், 20 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட, 1 லட்சத்து, 48 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும்.

இதற்கிடையே, அமேசான் நிறுவனமும் ரிலையன்சில் முதலீடு செய்வது குறித்து பேச்சு நடத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் முதலீட்டு நிறுவனங்களும், ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

குறிப்பாக அபுதாபி முதலீட்டு ஆணையம், சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம் ஆகியவை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லரை வணிகத்தில் முதலீடு செய்வது குறித்து பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வருகின்றன.யோசனைஅபுதாபி முதலீட்டு ஆணையம், 5,500 கோடி ரூபாயும்; சவுதி முதலீட்டு நிதியம், 11 ஆயிரத்து, 100 கோடி ரூபாயும் முதலீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை தவிர, அபுதாபியை சேர்ந்த,'முபதாலா'வும் முதலீடு செய்வது குறித்த யோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.சந்தை மதிப்பு அதிகரிப்புரிலையன்ஸ் சில்லரை வணிகத்தில் சில்வர் லேக் பார்ட்னர்ஸ் 7,500 கோடி ரூபாயை முதலீடு செய்ததை அடுத்து, நேற்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை, தேசிய பங்குச் சந்தையில், 7.29 சதவீதம் அதிகரித்தது. இதன் காரணமாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 14.67 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. பங்கின் விலையும் இதுவரை இல்லாத அளவில் 2,319 ரூபாயாக உயர்ந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)