பதிவு செய்த நாள்
10 செப்2020
21:34
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் சில்லரை விற்பனை வணிகத்தில், 40 சதவீதம் அளவுக்கு அமேசானுக்கு விற்பனை செய்ய ஆர்வமாக இருப்பதாக, சந்தை செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து விபரமறிந்த நபர் கூறியதாவது:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஜியோ பிளாட்பார்ம் வணிகத்தில் முதலீடுகளை திரட்டியதை அடுத்து, சில்லரை விற்பனை வணிகத்திலும் முதலீடுகளை திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இதன் காரணமாக, அண்மையில், 'சில்வர் லேக் பார்ட்னர்ஸ்' நிறுவனம், 7,500 கோடி ரூபாயை, இப்பிரிவில் முதலீடு செய்தது.பேச்சுஇந்நிலையில், அமேசானுக்கு, 40 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியில் ரிலையன்ஸ் இறங்கி இருக்கிறது. இதன் மூலம், 20 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட, 1 லட்சத்து, 48 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும்.
இதற்கிடையே, அமேசான் நிறுவனமும் ரிலையன்சில் முதலீடு செய்வது குறித்து பேச்சு நடத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் முதலீட்டு நிறுவனங்களும், ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
குறிப்பாக அபுதாபி முதலீட்டு ஆணையம், சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம் ஆகியவை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லரை வணிகத்தில் முதலீடு செய்வது குறித்து பேச்சு நடத்தி வருவதாக செய்திகள் வருகின்றன.யோசனைஅபுதாபி முதலீட்டு ஆணையம், 5,500 கோடி ரூபாயும்; சவுதி முதலீட்டு நிதியம், 11 ஆயிரத்து, 100 கோடி ரூபாயும் முதலீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர, அபுதாபியை சேர்ந்த,'முபதாலா'வும் முதலீடு செய்வது குறித்த யோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.சந்தை மதிப்பு அதிகரிப்புரிலையன்ஸ் சில்லரை வணிகத்தில் சில்வர் லேக் பார்ட்னர்ஸ் 7,500 கோடி ரூபாயை முதலீடு செய்ததை அடுத்து, நேற்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை, தேசிய பங்குச் சந்தையில், 7.29 சதவீதம் அதிகரித்தது. இதன் காரணமாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 14.67 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. பங்கின் விலையும் இதுவரை இல்லாத அளவில் 2,319 ரூபாயாக உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|