பதிவு செய்த நாள்
11 செப்2020
23:02
புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில், 10.4 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாக, மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
இந்த சரிவுக்கு, தயாரிப்பு துறை உற்பத்தி மற்றும் சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.இதுகுறித்து, மத்திய புள்ளியியல் துறை மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜூலை மாதத்தில், தயாரிப்புத் துறை உற்பத்தி, 11.1 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
சுரங்கத் துறை உற்பத்தி, 13 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், மின் உற்பத்தியும், 2.5 சதவீதம் சரிந்துள்ளது.கொரோனா பாதிப்புகளை தடுக்கும் வகையில், அரசு, ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்த காரணத்தால், பெரும்பாலான தொழிலகங்கள், மார்ச் மாதத்திலிருந்து இயங்கவில்லை.
இதன் காரணமாக, தொழில் துறை உற்பத்தி சரிந்துள்ளது.படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தொழில் துறை நடவடிக்கைகளும் மெல்ல அதிகரித்து வருகின்றன.இதற்கான குறியீடு ஜூலை மாதத்தில், 118.1 புள்ளியாக உள்ளது. இதுவே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் முறையே, 54.0, 89.5 மற்றும் 108.9 புள்ளிகளாக இருந்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|