பதிவு செய்த நாள்
13 செப்2020
00:11
புதுடில்லி, செப். 13–
ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் பணிகளை நிர்வகிக்க விரும்பும் வங்கிகளுக்கான ஏல விண்ணப்பத்துக்கான கெடு, நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வசம் இருக்கும், ஐ.ஆர்.சி.டி.சி., பங்குகளில், 15 – 20 சதவீத பங்குகளை ஏல விற்பனை முறை மூலம், விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை இப்பங்கு விற்பனை பணிகளை நிர்வகிக்க விரும்பும் வங்கிகளுக்கான ஏலத்தை அறிவித்து, கடந்த, 10ம் தேதி கடைசி நாள் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது விண்ணப்பத்துக்கான நாள் திங்கள் கிழமை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வசம், 87.40 சதவீதம் அளவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தின் பங்குகள் உள்ளன.மத்திய அரசு, அதன் பங்குவிலக்கல் மூலமாக, 2.10 லட்சம் கோடி ரூபாய் திரட்டும் இலக்குக்கு, இந்த பங்கு விற்பனை உதவிகரமாக இருக்கும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|