பதிவு செய்த நாள்
13 செப்2020
00:16
புதுடில்லி:கொரோனா பாதிப்புகள் காரணமாக, பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் சூழலிலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தங்க ஈ.டி.ஏப்., திட்டத்தில், 908 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது.
தொடர்ச்சியாக கடந்த, 5 மாதங்களாக இந்த திட்டத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், தங்க ஈ.டி.எப்., திட்டத்தில் மொத்தம், 5,356 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘ஆம்பி’ தெரிவித்து உள்ளதாவது:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 908 ரூபாய் தங்க முதலீட்டு திட்டத்தில் வந்து இருந்தாலும், ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, சற்று குறைவுதான். கடந்த ஜூலை மாதத்தில், 921 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
பொருளாதார வளர்ச்சிகள் தடைபட்டிருக்கும் நிலையில், தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பதால், தங்க ஈ.டி.எப்., திட்டங்களில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு ஆம்பி தெரிவித்துள்ளது.நடப்பாண்டில் முதலீடு:மாதம் தொகை (ரூபாய் கோடியில்) ஜனவரி 202பிப்ரவரி 1,483மார்ச் (-_) 195ஏப்ரல் 731மே 815ஜூன் 494ஜூலை 921ஆகஸ்ட் 908
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|