பதிவு செய்த நாள்
13 செப்2020
00:22
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 54 ஆயிரத்து, 201 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது, இந்திய மதிப்பில், 39.57 லட்சம் கோடி ரூபாய் ஆகும். மேலும் இது இந்திய வரலாற்றில் இல்லாத உயர்வாகும்.மதிப்பீட்டு வாரத்தில், அன்னிய பண மதிப்பு அதிகரித்த காரணத்தால், கையிருப்பு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:
கடந்த, 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 58.2 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, 39.57 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில் ஆகஸ்ட், 28ம் தேதி நிலவரப்படி இருப்பு, 388 கோடி டாலர் அதிகரித்து, 54 ஆயிரத்து, 143 கோடி டாலராக அதிகரித்திருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாட்டு பண இருப்பு, 26.9 கோடி டாலர் அதிகரித்து, 49 ஆயிரத்து, 836 கோடி டாலராக உயர்ந்துள்ளது. மேலும், தங்கத்தின் இருப்பு மதிப்பு, 32.1 கோடி டாலர் அதிகரித்து, 3,752 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.73 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரொக்க சந்தையில்...ரிசர்வ் வங்கி, தொடர்ந்து அதிக அளவில், அமெரிக்க டாலரை வாங்கி வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில், 1,597 கோடி அமெரிக்க டாலரை ரொக்க சந்தையில் வாங்கி உள்ளது.கடந்த ஜூலை மாதத்தில், ரொக்க சந்தையில், இந்திய ரிசர்வ் வங்கி மொத்தம், 1,690 கோடி டாலரை வாங்கியது. மேலும், 93 கோடி டாலரை விற்பனை செய்துள்ளது.
இதுவே, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 159.2 கோடி அமெரிக்க டாலரை வாங்கியுள்ளது. மேலும், 168.5 கோடி டாலரை விற்பனை செய்துள்ளது.கடந்த நிதியாண்டில், ரிசர்வ் வங்கி மொத்தம், 4,509.7 கோடி டாலரை வாங்கியுள்ளது. கூடவே, 7,220.5 கோடி டாலரை விற்பனை செய்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|