பதிவு செய்த நாள்
13 செப்2020
22:36
கொரோனா பாதிப்பு சூழலில் பலரும் வங்கி கிளைக்கு நேரில் செல்வதை தவிர்த்து, ‘டிஜிட்டல்’ முறையில் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். பண பரிவர்த்தனை, ‘பில்’ செலுத்துவது போன்ற வசதிகளை டிஜிட்டல் முறையில் அணுகுவது மட்டும் அல்லாமல், வங்கி சேமிப்பு கணக்கையில் வீட்டில் இருந்தே டிஜிட்டல் முறையில் துவக்கி கொள்ளவும் பல வங்கிகள் வழி செய்துள்ளன. வீடியோ கே.ஒய்.சி., வசதி மூலம், வீட்டில் இருந்தே சேமிப்பு கணக்கை துவக்கலாம். இது தொடர்பான வழிமுறைகளை பார்க்கலாம்:
கே.ஒய்.சி., அவசியம்:
வங்கி சேமிப்பு கணக்கு துவக்க வேண்டும் என்றால், ‘நோ யுவர் கஸ்டமர்’ எனப்படும் கே.ஒய்.சி., நடைமுறையை பூர்த்தி செய்ய வேண்டும். ஒருவரது அடையாளம், முகவரி. இதர விபரங்கள் ஆகியவற்றை உறுதி செய்ய இது உதவுகிறது. டிஜிட்டல் முறையில் வங்கி சேமிப்பு கணக்கு துவக்கவும் இந்த நடைமுறை அவசியமாகும்.
டிஜிட்டல் வசதி:
வங்கி கிளைக்குச் செல்லாமல் சேமிப்பு கணக்கை துவக்க விரும்புகிறவர்கள், கே.ஒய்.சி., நடைமுறையை நிறைவேற்ற, இ-–கே.ஒய்.சி., வசதியை நாடலாம். இரண்டு விதமான டிஜிட்டல் சேமிப்பு கணக்கை துவக்கலாம். ஒன்று, ஆதார் அடிப்படையிலான இ-–கே.ஒய்.சி., மூலம் துவக்கப்படுவது. மற்றொன்று, முழு கே.ஒய்.சி., சார்ந்தது.
ஓராண்டு காலம்:
இணையம் மூலம் ஆவணங்களை சமர்ப்பிக்கும் இ-–கே.ஒய்.சி., மூலம் துவக்கப்படும் சேமிப்பு கணக்கை, ஓராண்டுக்குள் வழக்கமான கணக்காகமாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு வங்கி கிளைக்குச் செல்ல வேண்டும். மேலும், இந்த கணக்கிற்கு வரம்புகளும் உண்டு.
‘வீடியோ’ வசதி:
முழு கே.ஒய்.சி., பூர்த்தி செய்ய, ‘வீடியோ’ வசதியை நாடலாம். ஆதார் எண் மற்றும் பான் கார்டு இருப்பவர்கள் இந்த வசதியை பெறலாம். வங்கி இணையதளத்தில். வீடியோ கே.ஒய்.சி., பகுதியில் ஆதார், பான் கார்டு விபரத்தை சமர்ப்பித்து, வங்கி அதிகாரியிடம் வீடியோ மூலம் ஆதாரம், ஆவணங்களை காண்பிக்கலாம்.
பாதுகாப்பு அம்சம்:
அனைத்து விபரங்களும் சரி பார்க்கப்பட்ட பிறகு, வங்கி சேமிப்பு கணக்கை துவக்க அனுமதிக்கும். வங்கிகள் இந்த வசதியில் தனி கவனம் செலுத்தி வரும் நிலையில் அண்மைக்காலத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான, ‘என்கிரிப்ஷன்’ உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் வங்கிகள் அளிக்கின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|