பதிவு செய்த நாள்
13 செப்2020
22:38
‘ரியல் எஸ்டேட்’ சந்தையில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கான வரவேற்பு, முன் இருந்ததை விட தற்போது அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதிய திட்டங்கள் தாமதமாகலாம் எனும் அச்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, உடனடியாக குடியேறக்கூடிய கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பலரும் நாடுகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு சூழலில், இத்தகைய வீடுகளுக்கான வரவேற்பு மேலும் அதிகரித்திருப்பதாக, ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான, 360 ரிலேட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பொது முடக்கம் காலத்தில் பலரும் சொந்த வீட்டிற்கான தேவையை உணர்ந்தது இதற்கான முக்கிய காரணம் என, நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், கட்டி முடிக்கப் பட்ட வீடுகளுக்கான ஜி.எஸ்.டி., சலுகையும் ஒரு காரணமாக அமைகிறது. வீட்டுக் கடனுக் கான வட்டி விகிதமும் வரலாறு காணாத வகையில் குறைவாக இருக்கும் சூழலில், வாடகை வீட்டில் குடியிருக்கும் பலரும், சுகாதார பாதுகாப்பிற்காக சொந்த வீட்டை நாடுகின்றனர்.
இவர்கள், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை விரும்புவதாக தெரிய வந்துள்ளது.வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலரும், இங்கு சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என, தெரிய வந்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|