தங்க ஈ.டி.எப்., திட்டம் அதிகரித்து வரும் முதலீடு தங்க ஈ.டி.எப்., திட்டம் அதிகரித்து வரும் முதலீடு ...  நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் ஆகஸ்டில் 0.16 சதவீதமாக அதிகரிப்பு நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் ஆகஸ்டில் 0.16 சதவீதமாக அதிகரிப்பு ...
'டிக்டாக்'கை வாங்கும் முயற்சி: 'மைக்ரோசாப்ட்'டுக்கு தோல்வி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2020
21:33

நியூயார்க்:அமெரிக்காவில்,'டிக்டாக்' வணிகத்தை வாங்குவதில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதைஅடுத்து, மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளி, 'ஆரக்கிள்' நிறுவனம் வெற்றி பெறும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

டிக்டாக் நிறுவனத்தின் வணிகம்,செப்டம்பர் 20ம் தேதிக்குள் ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கப்படாவிட்டால், அது தடை செய்யப்படும் என அறிவித்திருந்தார், அமெரிக்க அதிபர் டிரம்ப். இதையடுத்து, டிக்டாக்கின் அமெரிக்க வணிகத்தை, அதன் தாய்நிறுவனமான சீனாவைச் சேர்ந்த,'பைட்டான்ஸ்' நிறுவனத்திடமிருந்து வாங்க, மைக்ரோசாப்ட், ஆரக்கிள் உள்ளிட்டவை முன்வந்தன.

இச்சூழலில், கடந்த ஞாயிறு அன்று, டிக்டாக்கின் அமெரிக்க வணிகம் தங்களுக்கு விற்கப் பட மாட்டாது என, பைட்டான்ஸ் தெரிவித்துள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.ஆனாலும், ஆரக்கிள் நிறுவனத்துடன் எத்தகைய ஒப்பந்தத்தை, பைட்டான்ஸ் மேற்கொள்ள இருக்கிறது என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இது குறித்து, 'வால்ஸ்ட்ரீட்' பத்திரிகை, ஆரக்கிள் நிறுவனத்தை, அமெரிக்காவில் டிக்டாக்கின், 'நம்பகமான தொழில்நுட்ப பங்குதாரர்' என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அது ஒரு முழுமையான விற்பனையாக இருக்காது என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும், அடுத்தகட்டமாக வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்காவின் அன்னிய முதலீட்டுக் குழு இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, விற்பனை என்பதற்கு மாறாக, பங்குதாரர்களாக மாற்றும் வகையில் தான் டிக்டாக்கின் நடவடிக்கை இருக்கும் என்றும் கருதப்படுகிறது. ஏனெனில், சீனா கடந்த மாதம் புதிய விதிமுறைகளை வெளியிட்டது.


அதன்படி, சீன அரசாங்கத்தின் வெளிப்படையான அனுமதியின்றி, டிக்டாக் தன் தொழில் நுட்பத்தை வெளிநாட்டினருக்கு மாற்ற இயலாது. இதன் காரணமாக, தரவுகள் உள்ளிட்ட வற்றில் பாதுகாப்பை அமெரிக்காவுக்கு உறுதிப்படுத்தும் வகையில், ஏதாவது ஒரு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தை கூட்டாளி ஆக்கவே, டிக்டாக் முயலும் என்றும் சொல்லப்படுகிறது.ஆரக்கிள் நிறுவனம் என்ன செய்ய இருக்கிறது என்பது குறித்து, இதுவரை அதன் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)