புதிய பங்குகள் வெளியீடு: களம் காணும் நிறுவனங்கள் புதிய பங்குகள் வெளியீடு: களம் காணும் நிறுவனங்கள் ...  நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க மூன்று கமிட்டிகள் நியமனம் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க மூன்று கமிட்டிகள் நியமனம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வளர்ச்சிமைனஸ் 9 சதவீதம் ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2020
21:53

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ், 9 சதவீதமாக இருக்கும் என்று, ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக, மிகவும் கண்டிப்பான ஊரடங்கை இந்தியா மேற்கொண்ட தால், அது, நாட்டின் பொருளாதாரத்தில் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் இந்நிறுவனம் வளர்ச்சி, மைனஸ் 4 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆசிய மேம்பாட்டு வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த, 40 ஆண்டு களில், இந்த அளவுக்கு இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவைக் காண்பது இதுவே முதன்முறையாகும்.தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் முதலீட்டை பாதிக்கக்கூடிய வகையில், பொது மற்றும் தனியார் கடன்கள் அதிகரிப்பது, வாராக் கடன் அதிகரிப்பு, அதிகரிக்கும் தொற்று நோய் பரவல் ஆகியவை வளர்ச்சியை பாதிக்கும் அம்சங்களாக இருக்கின்றன.இவ்வாறு தெரிவித்துள்ளது.

எஸ் அண்டு பி.,ரேட்டிங்ஸ்

இதேபோல் அமெரிக்க தர நிர்ணய நிறுவனமான, எஸ் அண்டு பி., நிறுவனமும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ், 5 சதவீதமாக இருக்கும் என்று முன்னர் சொன்னதை மாற்றி, மைனஸ், 9 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.அதிகரித்து வரும் கொரோனா பரவல், தனிநபர் செலவு, முதலீடுகள் ஆகியவை தொடர்ந்து நீண்ட காலம் பாதிப்பை ஏற்படுத்தும்.இதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் நீடிக்கும்வரை, மக்கள் வெளியே செல்வதும்; செலவழிப்பதும் குறைவாகவே இருக்கும். நிறுவனங்களும் அதிக அழுத்தங்களை சந்திக்கும் என்றும் எஸ் அண்டு பி., தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)