பதிவு செய்த நாள்
15 செப்2020
21:53
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ், 9 சதவீதமாக இருக்கும் என்று, ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக, மிகவும் கண்டிப்பான ஊரடங்கை இந்தியா மேற்கொண்ட தால், அது, நாட்டின் பொருளாதாரத்தில் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் இந்நிறுவனம் வளர்ச்சி, மைனஸ் 4 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆசிய மேம்பாட்டு வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த, 40 ஆண்டு களில், இந்த அளவுக்கு இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவைக் காண்பது இதுவே முதன்முறையாகும்.தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் முதலீட்டை பாதிக்கக்கூடிய வகையில், பொது மற்றும் தனியார் கடன்கள் அதிகரிப்பது, வாராக் கடன் அதிகரிப்பு, அதிகரிக்கும் தொற்று நோய் பரவல் ஆகியவை வளர்ச்சியை பாதிக்கும் அம்சங்களாக இருக்கின்றன.இவ்வாறு தெரிவித்துள்ளது.
எஸ் அண்டு பி.,ரேட்டிங்ஸ்
இதேபோல் அமெரிக்க தர நிர்ணய நிறுவனமான, எஸ் அண்டு பி., நிறுவனமும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ், 5 சதவீதமாக இருக்கும் என்று முன்னர் சொன்னதை மாற்றி, மைனஸ், 9 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.அதிகரித்து வரும் கொரோனா பரவல், தனிநபர் செலவு, முதலீடுகள் ஆகியவை தொடர்ந்து நீண்ட காலம் பாதிப்பை ஏற்படுத்தும்.இதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கொரோனா பரவல் நீடிக்கும்வரை, மக்கள் வெளியே செல்வதும்; செலவழிப்பதும் குறைவாகவே இருக்கும். நிறுவனங்களும் அதிக அழுத்தங்களை சந்திக்கும் என்றும் எஸ் அண்டு பி., தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|