பதிவு செய்த நாள்
15 செப்2020
21:58
திருப்பூர்:கொரோனா காலத்தில், திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு, 201 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தில், ஏப்., – ஆக., வரை ஐந்து மாதங்களில், ஆடை ஏற்றுமதி நிறுவனங்களின், 359 விண்ணப்பங்களுக்கு, 72.31 கோடி ரூபாய் வழங்கியது. மேலும் ஆடை உற்பத்தி சார்ந்த பிற நிறுவனங்களின், 245 விண்ணப்பங்களுக்கு, 12.46 கோடி ரூபாய் என, மொத்தம், 84.77 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட வணிக வரித்துறை மூலம், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாதங்களில், 1,122 விண்ணப்பங்களுக்கு, 116.29 கோடி ரூபாய் ‘ரீபண்டு’ வழங்கப்பட்டுள்ளது. இரு துறைகள்மூலம், மொத்தம், 201.06 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய ஜி.எஸ்.டி., திருப்பூர் மாவட்ட துணை கமிஷனர் சித்தார்த்தன் கூறியதாவது: தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு, விரைந்து ‘ரீபண்டு’ வழங்கப்படுகிறது.ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தில்,94.99 கோடி ரூபாய் ‘ரீபண்டு’ கேட்டு, 636 விண்ணப்பம் பெறப்பட்டன. இதில், 604 விண்ணப்பங்களுக்கு, 84.77 கோடி ரூபாய் தொகை விடுவிக்கப்பட்டது.
ஆவண குறைபாடு காரணமாக, 32 விண்ணப்பங்களுக்கான, 1.57 கோடி ரூபாய் ‘ரீபண்டு’ நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. தவறாக விண்ணப்பிக்கப்பட்டதால், 8.65 கோடி ரூபாய் ‘ரீபண்டு’ நிராகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|