பதிவு செய்த நாள்
17 செப்2020
21:18
புதுடில்லி:நாட்டின் பெட்ரோல் விற்பனை, நடப்பு மாதத்தின் முதல் பாதியில், அதிகரித்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகான முதல் அதிகரிப்பாகும் இது.கடந்த, 1ம் தேதி முதல், 15ம் தேதி வரையிலான காலத்தில், நாட்டின் பெட்ரோல் விற்பனை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட, 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, 7 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த, மார்ச், 25ம் தேதிக்குப் பின் முதன் முறையாக இப்போது தான் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.இருப்பினும், டீசல் விற்பனை இன்னும் குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 6 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. ஆனாலும், முந்தைய ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, 19.3 சதவீதம் அதிகரித்துள்ளது.நடப்பு மாதத்தின் முதல் பாதியில், பெட்ரோல் விற்பனை, 9.65 லட்சம் டன் ஆக உள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 9.45 லட்சம் டன் ஆகவும்; ஆகஸ்ட் மாதத்தில், 9 லட்சம் டன் ஆகவும் இருந்தது.நாட்டில் மிகவும் நுகரப்படும் பொருளான டீசல் விற்பனை, நடப்பு மாதத்தின் முதல் பாதியில், 21.3 லட்சம் டன் ஆக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலத்தில், 22.5 லட்சம் டன் ஆகவும்; நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 17.8 லட்சம் டன் ஆகவும் இருந்தது.
ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டு வருவதால், விற்பனை அதிகரித்து வந்தாலும், பிராந்திய அளவிலான தடைகள் விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.மக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து, சொந்த வாகனங்களில் அதிகம் செல்வதால், பெட்ரோல் விற்பனை அதிகரித்து வருகிறது.சமையல் எரிவாயு விற்பனையை பொறுத்தவரை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 12.5 சதவீதமும்; கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது, 13.5 சதவிதமும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்டில், கார் விற்பனை, 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் விற்பனை, 3 சதவீதம் அதிகரித்துள்ளது.அடுத்து, பண்டிகை காலம் ஆரம்பமாக இருப்பதை முன்னிட்டு, அக்டோபரில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|