மொத்த வரி வசூல் 22.5 சதவீதம் சரிவு மொத்த வரி வசூல் 22.5 சதவீதம் சரிவு ...  ‘சுயசார்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்த மிகவும் சரியான தருணம் இது!’ ‘சுயசார்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்த மிகவும் சரியான தருணம் இது!’ ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் பெட்ரோல் விற்பனை முதன் முறையாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2020
21:18

புதுடில்லி:நாட்டின் பெட்ரோல் விற்பனை, நடப்பு மாதத்தின் முதல் பாதியில், அதிகரித்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.


கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகான முதல் அதிகரிப்பாகும் இது.கடந்த, 1ம் தேதி முதல், 15ம் தேதி வரையிலான காலத்தில், நாட்டின் பெட்ரோல் விற்பனை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட, 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, 7 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த, மார்ச், 25ம் தேதிக்குப் பின் முதன் முறையாக இப்போது தான் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.இருப்பினும், டீசல் விற்பனை இன்னும் குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 6 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. ஆனாலும், முந்தைய ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, 19.3 சதவீதம் அதிகரித்துள்ளது.நடப்பு மாதத்தின் முதல் பாதியில், பெட்ரோல் விற்பனை, 9.65 லட்சம் டன் ஆக உள்ளது.


இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 9.45 லட்சம் டன் ஆகவும்; ஆகஸ்ட் மாதத்தில், 9 லட்சம் டன் ஆகவும் இருந்தது.நாட்டில் மிகவும் நுகரப்படும் பொருளான டீசல் விற்பனை, நடப்பு மாதத்தின் முதல் பாதியில், 21.3 லட்சம் டன் ஆக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலத்தில், 22.5 லட்சம் டன் ஆகவும்; நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 17.8 லட்சம் டன் ஆகவும் இருந்தது.

ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டு வருவதால், விற்பனை அதிகரித்து வந்தாலும், பிராந்திய அளவிலான தடைகள் விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.மக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து, சொந்த வாகனங்களில் அதிகம் செல்வதால், பெட்ரோல் விற்பனை அதிகரித்து வருகிறது.சமையல் எரிவாயு விற்பனையை பொறுத்தவரை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 12.5 சதவீதமும்; கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது, 13.5 சதவிதமும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்டில், கார் விற்பனை, 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் விற்பனை, 3 சதவீதம் அதிகரித்துள்ளது.அடுத்து, பண்டிகை காலம் ஆரம்பமாக இருப்பதை முன்னிட்டு, அக்டோபரில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)