பதிவு செய்த நாள்
17 செப்2020
21:49
புதுடில்லி:உலகளவிலான, ‘ஸ்மார்ட்’ நகரங்களுக்கான குறியீட்டில், சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.‘எஸ்.யு.டி.டி.,’ எனும், சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ‘ஐ.எம்டி.,’ எனும், மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம், நடப்பு ஆண்டுக்கான, ஸ்மார்ட் நகரங்களின் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
கொரோனா காலத்தில், தொழில்நுட்பம் எந்த அளவுக்கு பங்கு வகித்திருக்கிறது என்பதையும் சேர்த்து, மொத்தம், 15 அம்சங்களின் அடிப்படை யில், இந்த குறியீடு தயாரிக்கப்பட்டுள்ளது. உலகளவில், சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றிருக்கும் நிலையில், நமது நாட்டைப் பொறுத்த வரை, ஹைதராபாத், 85வது இடத்தையும்; புதுடில்லி, 86 வது இடத்தையும்; மும்பை, 93 வது இடத்தையும்; பெங்களூரு, 95வது இடத்தையும் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டில், இந்த நகரங்கள் முறையே, 67, 68, 78, 79 ஆகிய இடங்களில் இருந்த நிலையில், தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள நகரங்கள், குறியீட்டில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதற்கு தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றங்களை, புதுப்பிக்காமல் இருந்தது காரணமாக அமைந்துள்ளது. மேலும், காற்று மாசடைந்திருப்பதும், இந்நகரங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதற்கு காரணமாக அமைந்துவிட்டது.
சிங்கப்பூரை அடுத்து, ஹெல்சிங்கி, சூரிச் ஆகியவை முறையே, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இதற்காக மொத்தம், 109 நகரங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|