பதிவு செய்த நாள்
19 செப்2020
20:48
மும்பை:வரலாற்றின் உச்சத்தில் இருந்த நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சரிவைக் கண்டுள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில், 2,612 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்து, 54 ஆயிரத்து, 166 கோடி டாலராக சரிந்துள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது, இந்திய மதிப்பில், 40.08 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.கடந்த, 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலவாணி இருப்பு, 40.11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில், அன்னிய பண மதிப்பு குறைந்த காரணத்தால், கையிருப்பு இந்த அளவுக்கு சரிவை கண்டுள்ளது. ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாட்டு பண இருப்பு, 84.10 கோடி டாலர் சரிந்து, 49 ஆயிரத்து, 752 கோடி டாலராக சரிந்துள்ளது. தங்கத்தின் இருப்பு மதிப்பு, 49.9 கோடி டாலர் அதிகரித்து, 3,802 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.81 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|