சில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்டில் சற்றே சரிந்தது சில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்டில் சற்றே சரிந்தது ...  தோல் பொருட்கள் ஏற்றுமதி இனி அதிகரிக்க வாய்ப்பு தோல் பொருட்கள் ஏற்றுமதி இனி அதிகரிக்க வாய்ப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகள் குறித்த கண்ணோட்டம் 'எதிர்மறை' நிலைக்கு இறக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2020
20:49

மும்பை:நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், பொதுத்துறை வங்கிகள் குறித்த தன் கண்ணோட்டத்தை, எதிர்மறை நிலைக்கு மாற்றி அறிவித்துள்ளது, இந்தியா ரேட்டிங்ஸ்.

உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான, இந்தியா ரேட்டிங்ஸ் ,இது குறித்து தெரிவித்து உள்ளதாவது:நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், வங்கிகள் நிலை குறித்த கண்ணோட்டமானது, 'நிலையானது' என்பதிலிருந்து, 'எதிர்மறை' என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

நலிவுறும் சொத்து மதிப்புகள், கடனுக்கான செலவுகள், மற்றும் பலவீனமான வருவாய் ஆகியவை காரணமாக, இந்நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், முடக்கப்பட்ட வளர்ச்சி வாய்ப்புகளும் கணக்கில் கொள்ளப்பட்டன.பொதுத்துறை வங்கிகள் குறித்த கண்ணோட்டம், 'எதிர்மறை'க்கு மாற்றப்பட்டாலும், தனியார் துறை வங்கிகளைப் பொறுத்தவரை, 'நிலையானது' என்ற தன்மையே தொடர்கிறது.


தனியார் வங்கிகள், கொரோனா சவால்களை சிறந்த முறையில் எதிர்கொண்டு வருகின்றன. கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி, நிறுவன மற்றும் நிறுவனங்கள் அல்லாத பிரிவுகளில் வழங்கப்பட்ட மொத்த வங்கிக் கடனில், 7.7 சதவீதம் அதாவது, கிட்டத்தட்ட, 8.4 லட்சம் கோடி ரூபாய் வரை மறுசீரமைக்கப்படலாம். அல்லது மறுசீரமைப்பிற்கு அவை தகுதி இல்லா விட்டால் வாராக் கடனாக மாறிவிடலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)