பதிவு செய்த நாள்
20 செப்2020
21:09
இந்திய தொழில்முறை பணியாளர்கள் மத்தியில், பொருளாதார தேக்கநிலை, கொரோனா தொற்று, பொது முடக்கம் காரணமாக, சேமிப்பு குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இணைய நிதிச் சேவை நிறுவனமான, ‘பாங்க்பஸார்’ நடத்திய, சேமிப்பு பழக்கம் தொடர்பான ஆய்வு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, சராசரி சேமிப்பு, 38 சதவீதத்தில் இருந்து, 32 சதவீதமாக குறைந்துள்ளது.தொழில்முறை பணியாளர்களில், 28 முதல், 34 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 35 வயது முதல், 45 வயது வரை உள்ளவர்கள் மத்தியில் சேமிப்பு அதிகம் குறைந்துள்ளது.
எனினும், முதல் முறை ஊதியம் பெறுபவர்கள் அதிகம் சேமித்துள்ளனர்.சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு சூழல் காரணமாக பலரும், ஆடம்பரமான இலக்குகளை தள்ளிப்போட்டுள்ளனர். அதே நேரத்தில் அவசர கால நிதிக்காக சேமிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பலரும் ஓய்வு காலம் போன்ற நீண்ட கால சேமிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இளம் தலைமுறையினர் தங்கள் நிதி இலக்குகளை அடைய, முதலீடு தொடர்பான நிதி சாதனங்களை முனைப்புடன் பயன்படுத்திக்கொள்வதிலும் ஆர்வம் கொண்டுள்ளதை, இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|