பொருளாதார தேக்க நிலை தவிர்க்க வேண்டிய தவறுகள் பொருளாதார தேக்க நிலை தவிர்க்க வேண்டிய தவறுகள் ...  அன்னிய செலாவணிக்கு வரிப்பிடித்தம்! அன்னிய செலாவணிக்கு வரிப்பிடித்தம்! ...
பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
22:32

புதுடில்லி:வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி காணும் என, நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் உற்பத்தியாளர்கள் சங்கமான, ‘சீமா’ தெரிவித்து உள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:அண்மைக்காலமாக வாஷிங்மெஷின், மைக்ரோவேவ், டிஷ் வாஷர், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட சாதனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வீட்டு வேலைகளை செய்வதற்கான பணியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாத காரணத்தாலும், வீட்டிலிருந்தே பலர் அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருவதாலும், இத்தகைய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.


இலக்கு

இதன் தொடர்ச்சியாக விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.பானாசோனிக் நிறுவனம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், விற்பனை கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, 18 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.இதேபோல், சோனி நிறுவனமும் ஓணத்தை முன்னிட்டு விற்பனை, 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

பலர் வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்வதால் டிவி, ஆடியோ சாதனங்கள் விற்பனை அதிகரித்திருப்பதாகவும், சோனி தெரிவித்துள்ளது.தென் கொரிய நிறுவனமான, எல்.ஜி., மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள் இந்த பண்டிகை காலத்தில், 30 சதவீதம் அளவுக்கு விற்பனையை அதிகரிக்க இலக்கு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளன.

மதிப்பு

தேவைகள் அதிகரித்து வந்தாலும், வினியோகத்தில் சவால்கள் இருப்பதாக சில நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.போன்கள், லேப்டாப், டிவி ஆகியவற்றில் தட்டுபாடுகள் இருப்பதாகவும், இதன் காரணமாக தேவைகள் கடுமையாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன.மேலும், இந்த துறையினர் விற்பனை குறித்து நம்பிக்கையுடன் இருந்தாலும், கடந்த ஆண்டு போல இந்த ஆண்டில் நுகர்வோரை கவர்ந்து, விற்பனையை அதிகரிக்க உதவும் திட்டங்கள் எதுவும் தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்படவில்லை என்கிறார்கள்.

கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் துறையின் சந்தை மதிப்பு, 76 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் ஆகும்.வீட்டு வேலைகளை செய்வதற்கான பணியாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாத காரணத்தாலும், வீட்டிலிருந்தே பலர் அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருவதாலும், இத்தகைய பொருட்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)