பதிவு செய்த நாள்
25 செப்2020
22:17
புதுடில்லி:மத்திய அரசின், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கடந்த, 21ம் தேதி வரை, மொத்தம், 1.77 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை அரசு அறிவித்திருந்தது. இதன்படி, நிறுவனங்கள் எந்த பிணையும் இன்றி, வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
இது குறித்து, நிதியமைச்சகம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:கடந்த, 21ம் தேதி வரை, மொத்தம், 1.77 லட்சம் கோடி ரூபாய் கடன்களுக்கான அனுமதி, 44.2 வணிகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில், 1.25 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு விட்டது.
இந்த கடன்கள், 12 பொதுத்துறை வங்கிகள், 24 தனியார் துறை வங்கிகள், 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.கடந்த, 21ம் தேதி வரை, பொதுத்துறை வங்கிகள் மூலம், 79 ஆயிரத்து, 347 கோடி ரூபாய் கடனுக்கான அனுமதிகள் கொடுக்கப்பட்டு, 65 ஆயிரத்து, 51 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|