பதிவு செய்த நாள்
26 செப்2020
20:59
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதனுடைய சில்லரை வணிகத்தில், 1.75 சதவீத பங்குகளை வாங்கிய வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த, சில்வர் லேக் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடமிருந்து, 7,500 கோடி ரூபாயை பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, சில்வர் லேக் பார்ட்னர்ஸ், 7,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக, கடந்த, 9ம் தேதியன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்திருந்தது. இதையடுத்து, தற்போது , 7,500 கோடியை பெற்றுவிட்டதாக, ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின், 1.75 சதவீத பங்குகள், சில்வர் லேக் பார்ட்னர்ஸ் வசம் செல்கிறது.
முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் குழுமத்தில், சில்வர் லேக் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது முதலீடாகும் இது. இதற்கு முன், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில், 9,990 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது. இப்போது இரண்டாவதாக ரீட்டெய்ல் வணிகத்தில் முதலீடு செய்துள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|