பதிவு செய்த நாள்
26 செப்2020
21:01
புதுடில்லி:நாட்டின் ஆன்லைன் மூலமான மளிகை பொருட்கள் விற்பனை பிரிவின் சந்தை மதிப்பு, நடப்பு ஆண்டின் இறுதியில், 22 ஆயிரத்து, 220 கோடி ரூபாய் என்ற நிலையைத் தொடும் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஆலோசனை நிறுவனமான, ‘ரெட்சீர்’ மற்றும் ஆன்லைன் மளிகை வர்த்தக நிறுவனமான, ‘பிக்பாஸ்கெட்’ ஆகியவை இணைந்து, ஆன்லைன் மூலமான மளிகை பொருட்கள் வர்த்தகம் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நடப்பு ஆண்டின் இறுதியில், ஆன்லைன் மூலமான மளிகைப் பொருட்கள் வர்த்தக பிரிவின் சந்தை மதிப்பு, 22 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் என்ற அளவுக்கு வளர்ச்சியை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா பரவல் காரணமாக, அதிகளவிலான நுகர்வோர், ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கத் துவங்கியுள்ளனர்.
மேலும், ரிலையன்ஸ் ரீட்டெய்ல் போன்ற பெரிய நிறுவனங்களின் வரவால், இரண்டாம் நிலை நகரங்களிலும் வளர்ச்சி ஏற்படும். மேலும், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் அதிகளவிலான வளர்ச்சி நடவடிக்கைகளில் இறங்கும்.இவை போன்ற காரணங்களால், மின்னணு மளிகை பொருட்கள் வர்த்தகத்தின் மொத்த விற்பனை மதிப்பு, இவ்வாண்டு இறுதிக்குள், 2.6 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|