பதிவு செய்த நாள்
26 செப்2020
21:02
புதுடில்லி:எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட திட்டமிட்டிருந்த தொகையை குறைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்கின் தாய் நிறுவனமான, எக்விடாஸ் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளதாவது:பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டப்படும் தொகை குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது. ஏற்கனவே திட்டமிட்டிருந்த, 550 கோடி ரூபாய் என்பதிலிருந்து, 280 கோடி ரூபாயாக குறைத்து திரட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனர் வசமிருக்கும் பங்குகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு, 7.2 கோடி பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.இவ்வாறு, தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு டிசம்பரில், பங்கு வெளியீட்டுக்காக செபிக்கு சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தில், 1,000 கோடி ரூபாய் திரட்ட இருப்பதாகவும்; அதில், புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம், 550 கோடி ரூபாய் திரட்ட இருப்பதாகவும்; நிறுவனர் வசம் இருக்கும், 8 கோடி பங்குகளை விற்பனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|