பதிவு செய்த நாள்
26 செப்2020
21:04
புதுடில்லி:இனிப்புகளை விற்பதற்கான புதிய கட்டுப்பாடு குறித்த அறிக்கையை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, பேக்கேஜ் செய்யப்படாமல் உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்புகள், எந்த தேதிக்கு முன்வரை சாப்பிடுவது நல்லது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும்; இந்த விதிமுறை, அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுமக்களின் நன்மைக்காகவும், பேக்கேஜ் செய்யப்படாமல், உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு பொருட்களை, எந்த தேதிக்கு முன் பயன்படுத்துவது சிறப்பு என்பது குறித்த தகவலை விற்பனையாளர் வழங்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
அக்டோபர் முதல் தேதியிலிருந்து இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.எந்த தேதிக்கு முன்பு வரை பயன்படுத்துவது சிறப்பு என்பது குறித்து, பொருளின் தன்மை மற்றும் இடத்தை வைத்து முடிவு செய்துகொள்ளலாம்.மேலும், பல்வேறு வகையான இனிப்புகளை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்பது குறித்த பட்டியல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|