பதிவு செய்த நாள்
26 செப்2020
21:06
புதுடெல்லி:கடந்த, 11ம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன், 5.26 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 102.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், வங்கி டெபாசிட், 11.98 சதவீதம் அதிகரித்து, 142.48 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுவே, கடந்த ஆண்டு, செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைந்த இரு வார காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன், 97.13 லட்சம் கோடி ரூபாயாகவும்; டெபாசிட், 127.22 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, ரிசர்வ் வங்கியின் தரவுகள் மேலும் தெரிவிப்பதாவது:கடந்த ஜூலை மாதத்தில், உணவு பொருட்கள் அல்லாத துறைகளில் வழங்கப்பட்ட கடன், 6.7 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், 11.4 சதவீத வளர்ச்சி பெற்றிருந்தது.மேலும், ஜூலை மாதத்தில், தொழிற்துறைக்கு வழங்கப்பட்ட கடன் வளர்ச்சி, 0.8 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், வளர்ச்சி, 6.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதத்தில், விவசாயம் மற்றும் அவை சார்ந்தவற்றுக்கு வழங்கப்பட்ட கடன், 5.4 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. சேவை துறையில், 10.1 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது. தனிநபர் கடனை பொறுத்தவரை, கடந்த ஜூலையில், 11.2 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலையில், 17 சதவீதமாக இருந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|