இனிப்புகளை விற்க உணவு பாதுகாப்பு ஆணையம் கட்டுப்பாடு இனிப்புகளை விற்க உணவு பாதுகாப்பு ஆணையம் கட்டுப்பாடு ... கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் ‘ஸ்டார்ட் அப்’ கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் ‘ஸ்டார்ட் அப்’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகளில் கடன் மற்றும் டெபாசிட் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2020
21:06

புதுடெல்லி:கடந்த, 11ம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன், 5.26 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 102.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், வங்கி டெபாசிட், 11.98 சதவீதம் அதிகரித்து, 142.48 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதுவே, கடந்த ஆண்டு, செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைந்த இரு வார காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன், 97.13 லட்சம் கோடி ரூபாயாகவும்; டெபாசிட், 127.22 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, ரிசர்வ் வங்கியின் தரவுகள் மேலும் தெரிவிப்பதாவது:கடந்த ஜூலை மாதத்தில், உணவு பொருட்கள் அல்லாத துறைகளில் வழங்கப்பட்ட கடன், 6.7 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், 11.4 சதவீத வளர்ச்சி பெற்றிருந்தது.மேலும், ஜூலை மாதத்தில், தொழிற்துறைக்கு வழங்கப்பட்ட கடன் வளர்ச்சி, 0.8 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், வளர்ச்சி, 6.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதத்தில், விவசாயம் மற்றும் அவை சார்ந்தவற்றுக்கு வழங்கப்பட்ட கடன், 5.4 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. சேவை துறையில், 10.1 சதவீத வளர்ச்சி காணப்பட்டுள்ளது. தனிநபர் கடனை பொறுத்தவரை, கடந்த ஜூலையில், 11.2 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலையில், 17 சதவீதமாக இருந்தது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)