பதிவு செய்த நாள்
28 செப்2020
22:37
புதுடில்லி:மின்னணு வர்த்தக கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, சி.ஏ.ஐ.டி., கோரியுள்ளது.
வாய்ப்பு
நாட்டின் மின்னணு வர்த்தக சந்தை வளர்ச்சி பெற்று வருவதாகவும்; ஆனால், மிகப்பெரிய நிறுவனங்களின் கைகளுக்குள் உள்நாட்டு சந்தை சென்றுவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் சிறிய வர்த்தகர்கள் கருதுகின்றனர்.மேலும், பெரிய நிறுவனங்களால் சிறிய வர்த்தகர்கள் பாதிக்கப்படாமலிருக்கும் வகையிலான கொள்கை தேவை எனவும் அவர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில், புதிய மின்னணு வர்த்தக கொள்கையை விரைவில் அரசு வெளியிட வேண்டும் என, வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.மத்திய அரசு, கடந்த ஆண்டு மின்னணு வர்த்தக கொள்கைக்கான வரைவு திட்டத்தை வெளியிட்டது. இந்த வரைவு திட்டத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள் தரவுகளை உள்நாட்டிலேயே சேமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
அபராதம்
இந்நிலையில், மின்னணு வர்த்தகத்தை ஒழுங்கு படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் தேவையான ஓர் ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும்.மேலும், மின்னணு வர்த்தக விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்டவற்றுக்கான அதிகாரத்தையும் அது கொண்டிருக்க வேண்டும் என்றும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|