பதிவு செய்த நாள்
28 செப்2020
23:09

புதுடில்லி:ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு உறுப்பினர்கள் கூட்டம், நாளை துவங்குவதாக இருந்த நிலையில், நாள் குறிப்பிடப்படாமல் தள்ளி வைப்பதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்கள் கொண்ட அதன் நிதிக் கொள்கை குழு கூட்டம், நாளை துவங்கி, அக்டோபர், 1ம் தேதியுடன் முடிவடைய இருப்பதாகவும், அக்கூட்டத்தின் இறுதியில், வட்டி விகிதம் குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் முன்னர் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
இந்நிலையில், இக்கூட்டம் நாளை நடைபெறாது எனவும், கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்துள்ளது. இருப்பினும், கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணத்தை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை.
ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கை குழுவில் இடம்பெற இருக்கும் புதிய வெளி உறுப்பினர்கள் குறித்த அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ரிசர்வ் வங்கி சட்டப்படி, வெளி உறுப்பினர்களுக்கான பதவிக் காலம், 4 ஆண்டு ஆகும்.
தற்போதைய குழு கடந்த, 2019 அக்டோபரில் அமைக்கப்பட்டதாகும்.புதிய வெளி உறுப்பினர்கள் குறித்த அரசின் முடிவு தெரிந்த பிறகு, கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|