குறுந்தொழில் - ஓர் புதிய உதயம்!குறுந்தொழில் - ஓர் புதிய உதயம்! ...  எல்.ஐ.சி.,பங்குகள் விற்பனை அமைச்சரவை அனுமதிக்கு முயற்சி எல்.ஐ.சி.,பங்குகள் விற்பனை அமைச்சரவை அனுமதிக்கு முயற்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வேதாந்தா நிறுவனம் வெளியேற பங்குச் சந்தைகள் அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
21:39

புதுடில்லி:அனில் அகர்வால் தலைமையிலான, வேதாந்தா நிறுவனம் பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறி, முழுக்க தனியார் நிறுவனமாக மாற முடிவு செய்திருக்கும் நிலையில், இதற்கு சந்தைகளின் கொள்கை அளவிலான ஒப்புதல் கிடைத்திருக்கிறது.

வேதாந்தா நிறுவனம் பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறுவதற்கு, மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்து உள்ளன. கடந்த திங்கள் அன்று கடிதம் மூலமாக, இந்த இரண்டு சந்தைகளும் தங்களுடைய ஒப்புதலை தெரிவித்துள்ளன.

வேதாந்தா ரிசோர்சஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களான வேதாந்தா ஹோல்டிங்ஸ் மொரீஷியஸ் மற்றும் வேதாந்தா ஹோல்டிங்ஸ் மொரீஷியஸ் 2 ஆகியவையும், வேதாந்தா சந்தையிலிருந்து வெளியேறுவது குறித்த பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளன.


வேதாந்தா நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறுவதற் கான திட்டத்துக்கான அனுமதியை, அதன் பங்குதாரர்களிடம்இருந்து பெற்றது.வேதாந்தா நிறுவனத்தின், 50.1 சதவீத பங்குகள் அதன் தாய் நிறுவனமான, வேதாந்தா ரிசோசர்ஸ் வசம் உள்ளன. தற்போது மீதம் இருக்கும், 49.9 சதவீத பங்குகளும் சந்தையிலிருந்து வாங்கப்பட இருக்கின்றன.


இதற்கு முன், லண்டன் பங்குச் சந்தையிலிருந்து, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனமும் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2018 அக்டோபரில், பொது சந்தையிலிருந்த அனைத்து பங்கு களையும் கைப்பற்றி, லண்டன் பங்குச் சந்தையிலிருந்து அந்நிறுவனத்தை வெளியேற்றி, முழுக்க தனியார் நிறுவனமாக்கினார், அனில் அகர்வால்.லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம், வேதாந்தா ரிசோர்சஸ் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)