பதிவு செய்த நாள்
01 அக்2020
11:34
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(அக்., 1) அதிக எழுச்சி உடன் காணப்பட்டன. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டது.
வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ்1.1 சதவீதம் உயர்ந்து 38,503.15ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 1.1 சதவீதம் உயர்ந்து 11,367.70ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 550 புள்ளிகளும், நிப்டி 155 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகத்தை தொடர்ந்தன.
மத்திய அரசு நேற்று தியேட்டர், பொழுதுபோக்கு உள்ளிட்டவைகளை திறக்க நேற்று அனுமதி அளித்ததன், இதன் எதிரொலியாகவும், ரூபாயின் மதிப்பு ஏற்றம் கண்டதாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாகவும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதை எதிரொலிக்கும் விதமாக இந்தியாவின் முக்கியமான சினிமா தியேட்டர்களான பிவிஆர்., மற்றும் ஐநாக்ஸ் பங்குகள் 13, 14 சதவீதம் உயர்ந்து காணப்பட்டன.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 37 காசுகள் உயர்ந்து ரூ.73.39ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|