பதிவு செய்த நாள்
02 அக்2020
21:46
மும்பை:சகாயவிலை வீடுகளுக்கான நிதியுதவி வழங்கும் நிறுவனமான,‘ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ்’ நிறுவனத்தில், உலகளவிலான தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, ‘வார்பர்க் பின்கஸ்’ 700 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் நிறுவனத்தில், 700 கோடி ரூபாயை முதலீடு செய்வதன் மூலம், இந்நிறுவனத்தின், 25 சதவீத பங்குகள், வார்பர்க் பின்கஸ் நிறுவனம் வசமாகும்.ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் இதற்காக, தங்கள் வசம் இருக்கும் பங்குகளில், 25 சதவீதத்தை விற்பனை செய்ய இருக்கிறார்கள்.
தற்சமயம், ட்ரூ நார்த் நிறுவனம் வசம், 45.97 சதவீத பங்குகளும், ஈதர் மொரீஷியஸ், பெஸ்ஸமர் ஆகிய நிறுவனங்கள் வசம் முறையே, 30.65 மற்றும் 16.28 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிறுவனம் அடுத்த ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது. சிறு தொழில் புரிவோர் அல்லது மாதச் சம்பளம் வாங்குவோர் பிரிவில், முதல் முறையாக வீடு வாங்குவோரை இந்த நிறுவனம் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.கடந்த, 2010ம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்நிறுவனம், 11 மாநிலங்களில் உள்ள, 60 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|