பதிவு செய்த நாள்
02 அக்2020
21:49
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, அதன் துவக்க நிலை காரான, ‘எஸ் – பிரஸ்ஸோ’ அறிமுகம் ஆகி, முதல் ஆண்டில், 75 ஆயிரம் கார்கள் விற்பனை ஆகியிருப்பதாக தெரிவித்துள்ளது.
எஸ் – பிரஸ்ஸோ கார், கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் ஆனது. சந்தையில் அறிமுகம் ஆன ஒரே மாதத்தில், இந்தியாவில் விற்பனை ஆகும்,‘டாப் 10’ கார்கள் வரிசையில் இடம் பெற்று விட்டது குறிப்பிடத்தக்கதாகும்.இந்த கார், மினி எஸ்.யு.வி., மாடலில் வந்ததை அடுத்து, இதன் காரணமாகவே பலரை ஈர்த்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளார்களை ஈர்க்கும் வகையில், இதன் வடிவமைப்பும் இதர வசதிகளும் இருக்கின்றது.
இது குறித்து, மாருதி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஷஷாங் ஸ்ரீவாத்ஸவா கூறியுள்ளதாவது: ஒராண்டு எனும் குறுகிய காலத்திற்குள்ளாகவே, தனக்கான வலுவான இடத்தை பிடித்துள்ளது, எஸ் – பிரஸ்ஸோ. இதில் இருக்கும் ஸ்மார்ட் பிளே இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்டிருக்கும் ஆடியோ மற்றும் குரல் வழி கட்டுப்பாடு போன்ற பல அம்சங்கள் இதற்கு உதவியாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|