பதிவு செய்த நாள்
02 அக்2020
21:59
சென்னை:தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு, வட்டி மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தை, இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு, வட்டி மானியத்துடன் கூடிய கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விசைப்படகு வைத்துள்ள மீனவர்கள், 2 லட்சம் ரூபாய் வரை, குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.இந்தக் கடன், கிசான் கார்டு திட்டத்தின் கீழ், நடைமுறை மூலதனக் கடனாக வழங்கப்படும்.
இதை பெற, தமிழக மீன்வளத் துறையில், ஒப்புதல் கடிதம் மற்றும் விசைப் படகின் விபரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.இந்தக் கடன், 7 சதவீத வட்டியில் வழங்கப்படும். ஓர் ஆண்டுக்குள் கடனை திரும்ப செலுத்து வோருக்கு, 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். மேலும், கடன் பெறுவோருக்கு, ‘ரூபே கிசான்’ கிரெடிட் கார்டு வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|