பதிவு செய்த நாள்
02 அக்2020
22:01
புதுடில்லி:கடந்த, ஆறு மாதங்களாக, நாட்டின் ஏற்றுமதியில் சரிவு காணப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில், 5.27 சதவீதம் அதிகரித்துள்ளது.
சரிவு
இதுகுறித்து, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் ஏற்றுமதி, கடந்த செப்டம்பர் மாதத்தில், 5.27 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 2.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏற்றுமதி, 1.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.அதே சமயம் இறக்குமதி, 19.6 சதவீதம் அளவுக்கு குறைந்து, 2.25 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
இதையடுத்து, வர்த்தகப் பற்றாக்குறை செப்டம்பர் மாதத்தில் 21 ஆயிரத்து, 534 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில், 86 ஆயிரத்து,358 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி, 21.43 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இறக்குமதிஅதேபோல், இறக்குமதியும் இந்த கால கட்டத்தில், 40.06 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டு உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இரும்புத் தாது, அரிசி, மருந்து, கார்பெட் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 35.92 சதவீதம் சரிந்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி, 51.14 சதவீதம் சரிந்துள்ளது.
எண்ணெய் அல்லாத பொருட்களின் இறக்குமதியும் சரிவைக் கண்டுஉள்ளது. இப்பொருட்களின் இறக்குமதி, 14.41 சதவீதம் சரிந்துள்ளது. இதுவே, கடந்த ஆறு மாதங்களில், 36.12 சதவீதம் சரிந்துள்ளது. தங்கத்தைப் பொறுத்தவரை அதன் இறக்குமதி, செப்டம்பரில், 52.85 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.இவ்வாறு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|