மீனவர்களுக்கு மானிய கடன் மீனவர்களுக்கு மானிய கடன் ... கடனில் மூழ்கியது உலகின் உயரமான கட்டடம் கட்டிய நிறுவனம்..! கடனில் மூழ்கியது உலகின் உயரமான கட்டடம் கட்டிய நிறுவனம்..! ...
கடந்த 6 மாதங்களுக்கு பிறகு ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2020
22:01

புதுடில்லி:கடந்த, ஆறு மாதங்களாக, நாட்டின் ஏற்றுமதியில் சரிவு காணப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில், 5.27 சதவீதம் அதிகரித்துள்ளது.

சரிவு

இதுகுறித்து, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் ஏற்றுமதி, கடந்த செப்டம்பர் மாதத்தில், 5.27 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 2.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏற்றுமதி, 1.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.அதே சமயம் இறக்குமதி, 19.6 சதவீதம் அளவுக்கு குறைந்து, 2.25 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

இதையடுத்து, வர்த்தகப் பற்றாக்குறை செப்டம்பர் மாதத்தில் 21 ஆயிரத்து, 534 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில், 86 ஆயிரத்து,358 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி, 21.43 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இறக்குமதிஅதேபோல், இறக்குமதியும் இந்த கால கட்டத்தில், 40.06 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இரும்புத் தாது, அரிசி, மருந்து, கார்பெட் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதி, 35.92 சதவீதம் சரிந்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி, 51.14 சதவீதம் சரிந்துள்ளது.

எண்ணெய் அல்லாத பொருட்களின் இறக்குமதியும் சரிவைக் கண்டுஉள்ளது. இப்பொருட்களின் இறக்குமதி, 14.41 சதவீதம் சரிந்துள்ளது. இதுவே, கடந்த ஆறு மாதங்களில், 36.12 சதவீதம் சரிந்துள்ளது. தங்கத்தைப் பொறுத்தவரை அதன் இறக்குமதி, செப்டம்பரில், 52.85 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.இவ்வாறு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)