பதிவு செய்த நாள்
02 அக்2020
22:07
புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான, ‘ரெயில்டெல்’, 700 கோடி ரூபாய் திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு விண்ணப்பித்துள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, மத்திய அரசு அதன் வசம் இருக்கும், 8.66 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
நெட்வொர்க் சேவை‘மினிரத்னா’ நிறுவனமான, ரெயில்டெல், தொலைதொடர்பு உள்கட்டமைப்பை வழங்கி வருகிறது. ரயில்வே பாதையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும், ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க் இந்நிறுவனம் வசம் உள்ளது.மேலும், நாடுமுழுக்க பிராட்பேண்டு மற்றும் மல்டிமீடியா நெட்வொர்க் சேவைகளையும் வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் அரசின், 25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய, மத்திய அமைச்சரவை, கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் அனுமதி வழங்கியது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஐ.டி.பி.ஐ., கேப்பிட்டல், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகியவை நிர்வகிக்கின்றன.
சூர்யோதை பேங்க்
‘சூர்யோதை ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப் பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்து உள்ளது.இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, 1.16 கோடி புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் வசம் இருக்கும், 84.67 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, எதிர்கால மூலதன தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, வங்கியின் நிகர மதிப்பு, ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. வங்கியில் டிபாசிட்டாக, 2,800 கோடி ரூபாய் உள்ளது. மேலும் கடனாக, 3,700 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறது.ஆக்சிஸ் கேப்பிட்டல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் மற்றும் ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ் ஆகியவை, இந்த புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|