கடந்த 6 மாதங்களுக்கு பிறகு   ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு கடந்த 6 மாதங்களுக்கு பிறகு ஏற்றுமதி 5.27 சதவீதம் அதிகரிப்பு ... கடனில் மூழ்கியது உலகின் உயரமான கட்டடம் கட்டிய நிறுவனம்..! கடனில் மூழ்கியது உலகின் உயரமான கட்டடம் கட்டிய நிறுவனம்..! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரெயில்டெல், சூர்யோதை பேங்க் புதிய பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2020
22:07

புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான, ‘ரெயில்டெல்’, 700 கோடி ரூபாய் திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு விண்ணப்பித்துள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, மத்திய அரசு அதன் வசம் இருக்கும், 8.66 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

நெட்வொர்க் சேவை‘மினிரத்னா’ நிறுவனமான, ரெயில்டெல், தொலைதொடர்பு உள்கட்டமைப்பை வழங்கி வருகிறது. ரயில்வே பாதையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும், ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க் இந்நிறுவனம் வசம் உள்ளது.மேலும், நாடுமுழுக்க பிராட்பேண்டு மற்றும் மல்டிமீடியா நெட்வொர்க் சேவைகளையும் வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் அரசின், 25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய, மத்திய அமைச்சரவை, கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் அனுமதி வழங்கியது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஐ.டி.பி.ஐ., கேப்பிட்டல், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகியவை நிர்வகிக்கின்றன.

சூர்யோதை பேங்க்

‘சூர்யோதை ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப் பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்து உள்ளது.இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, 1.16 கோடி புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் வசம் இருக்கும், 84.67 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, எதிர்கால மூலதன தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாத நிலவரப்படி, வங்கியின் நிகர மதிப்பு, ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. வங்கியில் டிபாசிட்டாக, 2,800 கோடி ரூபாய் உள்ளது. மேலும் கடனாக, 3,700 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறது.ஆக்சிஸ் கேப்பிட்டல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் மற்றும் ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ் ஆகியவை, இந்த புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகிக்கின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)