பதிவு செய்த நாள்
04 அக்2020
21:45
சென்னை, அக். 5–-சென்னையில் அமைய உள்ள மிகப் பெரிய குடியிருப்பு திட்டமான, எஸ்.பி.ஆர்., சிட்டியில், எல்.ஐ.சி., வீட்டுக் கடன் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
சென்னையில், 17 லட்சம் சதுர அடியில், மிகப்பெரிய குடியிருப்பு கட்டும் திட்டம் நடந்து வருகிறது. இந்த திட்டத்தில், எல்.ஐ.சி., வீட்டுக் கடன் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. கட்டுமானப் பணிக்கு தேவையான நிதியை, எல்.ஐ.சி., நிறுவனம் வழங்குவதால், இந்த நிதியாண்டு இறுதிக்குள், வீடு கட்டும் பணி முடித்து ஒப்படைக்கப்படும் என, எஸ்.பி.ஆர்., சிட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பு இயக்குனர் சேட்டன் போரா கூறுகையில், ‘‘முதலீடு செய்யப்பட்ட நிதி, கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படுத்துவதால், இந்த நிதியாண்டு இறுதிக்குள் திட்டம் முழுமையடைய உதவும். கட்டுமானத்தின் வேகத்திற்கும் உத்வேகம் அளிக்கும்,’’ என்றார்.
எஸ்.பி.ஆர்., சிட்டியின் இயக்குனர் நவின்ரங்கா கூறுகையில், ‘‘நாட்டின் தலைசிறந்த கடன் வழங்கும் நிறுவனமான, எல்.ஐ.சி., வீட்டுக்கடன் நிறுவனம், இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்கு நிதி அளித்து உள்ளது. ‘‘எங்களது சிறந்த விற்பனை மற்றும் வினியோகம் காரணமாக, வரும் காலங்களில் வளர்ச்சியை பார்க்க முடியும்,’’ என்றார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|