பதிவு செய்த நாள்
05 அக்2020
20:32
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் உலகின் மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலிஃபா. இந்த கட்டடத்தை கட்டிய அரபுடெக் என்ற நிறுவனம் தற்போது கொரோனா தாக்கம் காரணமாக நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அதன் பங்குகளை விற்க முடிவு எடுத்துள்ளது. தொடர் நஷ்டம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் வாலெட் அல் மொஹரம் அல் முகாரி, கல்ஃப் நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து கட்டுமான பணி பெருநிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக மத்திய தரைக்கடல் நாடுகளில் இந்த தொழில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களை கடனில் மூழ்கி தத்தளித்துவரும் நிலையில் சிறு நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் கடுமையான நஷ்டத்தில் வாழ்ந்துள்ளனர்.
மத்திய தரைக்கடல் நாடுகளில் மிகப்பெரிய கட்டுமான பணி நிறுவனமான அரபுடெக் இவ்வாறு நஷ்டத்தில் தத்தளித்து நிறுவனத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது உலக அளவில் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி துபாய் வர்த்தக சந்தை அரபு டெக் நிறுவனத்தோடு வர்த்தகத்தை துண்டித்தது.
இதனால் பங்குதாரர்களுக்கு தொகையை செலுத்த முடியாமல் இந்த நிறுவனம் தத்தளித்தது. இதனை அடுத்து இந்த நிறுவனத்தை விற்று பங்குதாரர்களுக்கு கடன்களை அடைத்து உள்ளார் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மொஹ்ரம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|