பதிவு செய்த நாள்
05 அக்2020
21:48
மும்பை:தொடர்ந்து, மூன்றாவது நாளாக, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வைச் சந்தித்தன. நேற்றைய வர்த்தகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கி பங்குகள் விலை அதிகரித்தன.மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ் குறியீடு, நேற்று வர்த்தகத்தின் இடையே, 39263.85 புள்ளிகள் எனும் உயரத்தை தொட்டது.
பின் வர்த்தகத்தின் இறுதியில், 276.65 புள்ளிகள் அதிகரித்து, 38973.70 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.71 சதவீதம் உயர்வாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டான, நிப்டியும், 86.40 புள்ளிகள் அதிகரித்து, 11503.35 புள்ளிகளில் நிலைபெற்றது.
இதையடுத்து, டாடா ஸ்டீல், சன்பார்மா, இன்போசிஸ், டெக் மகிந்திரா, இண்டஸ்இண்ட் பேங்க், எச்.சி.எல்., டெக், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எச்.டி.எப்.சி., பேங்க் ஆகிய நிறுவன பங்குகளும் விலை அதிகரித்தன.மாறாக, பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஐடிசி., பவர்கிரிட் ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிந்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல் நிலை குறித்த சாதகமான தகவல்கள் வந்ததை அடுத்து, உலக சந்தைகளில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையும் அதிகரித்தது. இது, ஆசிய மற்றும் இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|