பதிவு செய்த நாள்
05 அக்2020
21:51
புதுடில்லி:பேடிஎம் நிறுவனம், இந்திய செயலிகளுக்கான டெவலப்பர்களை ஆதரிக்கும் வகையில், புதிதாக,'ஆண்ட்ராய்டு மினி ஆப் ஸ்டோர்' ஒன்றை அறிமுகம் செய்ததை அடுத்து, கூகுள் தன் நிலையிலிருந்து சற்று இறங்கிஉள்ளது.
கவலை
இந்திய டெவலப்பர்கள், தன் கூகுள் பிளே பில்லிங் முறையுடன் ஒருங்கிணைப்பதற்கான காலக்கெடுவை, 2022ம் ஆண்டு மார்ச், 31 வரை நீட்டித்திருப்பதாக, கூகுள் அறிவித்துள்ளது. அண்மையில் கூகுள் நிறுவனம் தன்னுடைய பில்லிங் முறையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, கூகுள் பிளே ஸ்டோரில் செயல்படும் செயலிகள், டிஜிட்டல் சேவைகளை, கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக விற்கும்போது, கூகுள் பிளே பில்லிங் முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மேலும் இதற்கு குறிப்பிட்ட சதவீத கட்டணத்தையும் தர வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.
கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறித்து, டெவலப்பர்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருந்தனர். இந்திய டெவலப்பர்கள் மற்றும் உரிமையாளர்களை, கூகுள் அதன் பில்லிங் முறையை பயன்படுத்த கட்டாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தன.
சந்தேகம்
இதன் தொடர்ச்சியாக, பேடிஎம் நிறுவனம், இந்தியாவுக்கான புதிய ஆண்ட்ராய்டு மினி ஆப் ஸ்டோர் ஒன்றை அறிமுகம் செய்தது. இதையடுத்து தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்துள்ளது கூகுள்.இது குறித்து, கூகுள் தன்னுடைய வலைப்பதிவில் கூறியிருப்பதாவது:
புதிய பில்லிங் முறை குறித்து எங்களது அறிவிப்புக்கு பிறகு, இந்திய செயலி டெவலப்பர்கள் மற்றும் உரிமையாளர்கள் மேலும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கின்றனர். அவர்களது சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பல சந்திப்புகளை கூகுள் நடத்த இருக்கிறது. மேலும், இந்திய டெவலப்பர்கள் கூகுள் பிளே பில்லிங் முறையுடன் தங்களை ஒருங்கிணைத்து கொள்ள கூடுதல் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|