பதிவு செய்த நாள்
05 அக்2020
21:55
புதுடில்லி:டி.சி.எஸ்., எனும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை நேற்று, 7.55 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பும், 10.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.
எதிர்பார்ப்பு
இதையடுத்து, 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை தாண்டிய, இரண்டாவது இந்திய நிறுவனம் என்ற சாதனையையும் நேற்று, டி.சி.எஸ்., படைத்தது. கடந்த மாதம் தான், 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட, இரண்டாவது நிறுவனமாக உயர்ந்தது. தற்போது ஒரே மாத அவகாசத்தில், 10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்துஉள்ளது.
இந்த எல்லையை தாண்டிய முதல் இந்திய நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகும்.டி.சி.எஸ்., நிறுவனம், அதன் பங்குகளை திரும்ப வாங்குவதற்கு, நாளை கூடவிருக்கும் அதன் நிர்வாகக் குழுவில் அனுமதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்ததை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் இந்நிறுவன பங்குகள் விலை அதிகரித்தன.
நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில், இந்நிறுவன பங்குகள் விலை, 7.55 சதவீதம் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், ஒரு பங்கின் விலை, 2,713.95 ரூபாயாக அதிகரித்தது. இது, கடந்த, 52 வாரங்களில் அதிகபட்சமாகும்.இதே போல், தேசிய பங்குச் சந்தையிலும் இந்நிறுவன பங்குகள் விலை, 52 வார அதிகபட்ச நிலையை எட்டியது.கடந்த, 2018ம் ஆண்டில் ஒரு முறை இந்நிறுவனம், 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளை திரும்ப வாங்கியது.
நடவடிக்கை
இதே போல், 2017ம் ஆண்டிலும் இத்தகையதொரு முயற்சியில் இறங்கியது.டி.சி.எஸ்., நிறுவனம், அதன் நீண்டகால மூலதன ஒதுக்கீட்டு கொள்கையின் ஒரு பகுதியாக, பங்குதாரர்களுக்கு அதிகப்படியான பணத்தை, பங்குகளை திரும்ப பெறும் நடவடிக்கை மூலம் திருப்பி கொடுத்து வரும் நடைமுறையை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|