‘மியூச்சுவல் பண்டு’ துறையில் சொத்து மதிப்பு அதிகரிப்பு ‘மியூச்சுவல் பண்டு’ துறையில் சொத்து மதிப்பு அதிகரிப்பு ...  ‘இன்னொரு ஊக்கச் சலுகையை வழங்க தயாராக இருக்கிறோம்’ ‘இன்னொரு ஊக்கச் சலுகையை வழங்க தயாராக இருக்கிறோம்’ ...
‘ஆன்லைன்’ பணப் பரிவர்த்தனை இந்தியா உலகளவில் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2020
21:57

புதுடில்லி:கொரோனா தொற்று பலவிதங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், டிஜிட்டல் நிதி பரிமாற்றங்கள் அதிகரிக்க, அது உதவிகரமாக இருந்துள்ளது.


உலகிலேயே அதிகளவிலான ஆன்லைன் நிதி பரிவர்த்தனையில், முன்னணி நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.நாட்டில், தற்போது நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட, 4.1 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இது கடந்த ஆண்டை விட, இருமடங்கு அதிகமாகும்.

உலகளவில் வணிகர்கள், வங்கிகள் மற்றும் மூலதன சந்தை நிறுவனங்களுக்கான தொழில் நுட்ப தீர்வுகளை வழங்கும் நிறுவனமான, எப்.ஐ.எஸ்., ஆய்வு அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் மட்டுமின்றி; மேலும் ஆறு நாடுகளில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள், கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகரித்துள்ளன.வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை, பஹ்ரைன், 657 சதவீத வளர்ச்சியை கண்டு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, கானா, 488 சதவீதத்துடனும்; பிலிப்பைன்ஸ், 309சதவீதத்துடனும்; ஆஸ்தி ரேலியா, 214 சதவீதத்துடனும் முன்னிலையில் உள்ளன.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 213 சதவீதமாகும்.தற்போதைய கொரோனா காலகட்டத்தில், தனிநபர் மற்றும் வணிகங்களுக்கு உடனடியாக பணத்தை பெறுவது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)