பதிவு செய்த நாள்
07 அக்2020
21:57
புதுடில்லி:கொரோனா தொற்று பலவிதங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், டிஜிட்டல் நிதி பரிமாற்றங்கள் அதிகரிக்க, அது உதவிகரமாக இருந்துள்ளது.
உலகிலேயே அதிகளவிலான ஆன்லைன் நிதி பரிவர்த்தனையில், முன்னணி நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.நாட்டில், தற்போது நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட, 4.1 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இது கடந்த ஆண்டை விட, இருமடங்கு அதிகமாகும்.
உலகளவில் வணிகர்கள், வங்கிகள் மற்றும் மூலதன சந்தை நிறுவனங்களுக்கான தொழில் நுட்ப தீர்வுகளை வழங்கும் நிறுவனமான, எப்.ஐ.எஸ்., ஆய்வு அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் மட்டுமின்றி; மேலும் ஆறு நாடுகளில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள், கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகரித்துள்ளன.வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை, பஹ்ரைன், 657 சதவீத வளர்ச்சியை கண்டு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, கானா, 488 சதவீதத்துடனும்; பிலிப்பைன்ஸ், 309சதவீதத்துடனும்; ஆஸ்தி ரேலியா, 214 சதவீதத்துடனும் முன்னிலையில் உள்ளன.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 213 சதவீதமாகும்.தற்போதைய கொரோனா காலகட்டத்தில், தனிநபர் மற்றும் வணிகங்களுக்கு உடனடியாக பணத்தை பெறுவது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|