‘ஆன்லைன்’ பணப் பரிவர்த்தனை இந்தியா உலகளவில் முதலிடம் ‘ஆன்லைன்’ பணப் பரிவர்த்தனை இந்தியா உலகளவில் முதலிடம் ...  ‘டிவி’ இறக்குமதிக்கு அரசு அனுமதி ‘டிவி’ இறக்குமதிக்கு அரசு அனுமதி ...
‘இன்னொரு ஊக்கச் சலுகையை வழங்க தயாராக இருக்கிறோம்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2020
22:00

புதுடில்லி:நாட்டின் பொருளாதாரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையை அதிகரிக்க, சரியான சமயத்தில் நிதி ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அரசு அறிந்துள்ளது. இன்னொரு நிதி ஊக்கச் சலுகையை வழங்க தயாராக இருக்கிறோம் என, முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.
விரையம்

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:பொருளாதார வளர்ச்சியை மேலும் துாண்டுவதற்காக, ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டிய அவசியம் இருப்பதை நாங்கள் உணர்கிறோம். இதை நான் புதிதாக சொல்லவில்லை. ஏற்கனவே நிதியமைச்சரும் இதை கூறியிருக்கிறார்.

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில், நுகர்வு தேவையை மீண்டும் உயர்த்த முயற்சித்து இருந்தால், அது வீணாகி இருக்கும். செலவழிப்பதற்கான அனைத்து வழிகளையும் அடைத்து இருந்த நிலையில், அந்த முயற்சியை மேற்கொண்டிருந்தால், அது விரையத்தையே ஏற்படுத்தி இருக்கும்.தளர்வுகள்தற்போது தளர்வுகளை அறிவித்து வருவதால், உற்பத்தி துறை, கொரோனாவுக்கு முந்தைய காலகட்ட நிலைக்கு திரும்பி வருகிறது.


மேலும், சேவை துறையும் விரைவில் மீட்சியை காணும்.எனவே, தளர்வுகள்மேலும் அதிகரிக்கும் போது, தேவைகள் அதிகரிக்கும்.இத்தகைய சூழலில், மேலும் ஒரு நிதி ஊக்கச் சலுகையை அறிவிக்க தயாராக இருக்கிறோம். அது ரிசர்வ் வங்கி தரப்பிலும், அரசின் தரப்பிலும் இருக்க வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஏற்கனவே, புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவர் கே.வி.காமத், ரிசர்வ் வங்கி மற்றும் அரசு தரப்பில் இன்னொரு நிதி ஊக்கச் சலுகையை அறிவிப்பதற்கான அவசியம் இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)