பதிவு செய்த நாள்
07 அக்2020
22:04
மும்பை:புதிய உறுப்பினர்களுடன், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் துவங்கியது. இக்கூட்டம், நாளை வரை நடைபெற இருக்கிறது.மொத்தம், மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தின் முடிவில், வட்டி குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்.
ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவின் கூட்டம், முதலில் கடந்த மாதம், 29ம் தேதி முதல், இந்த மாதம், 1ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அரசு தரப்பில் புதிய உறுப்பினர்கள் நியமனம் தாமதமான காரணத்தால், கூட்டம் ரத்து செய்யப்பட்டு, பின், 7ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டது.ரிசர்வ் வங்கி, இம்முறை வட்டி குறைப்பை அறிவிக்காமல், தற்போது இருக்கும் நிலையே தொடரும் என அறிவிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக பல தரப்பு நிபுணர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு, வினியோகங்களில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களால், சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்திருப்பதை காரணமாக காட்டு கிறார்கள்.தொற்று நோய் காரணமாக, பொருளாதார சரிவை கட்டுப்படுத்துவதில் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வட்டி விகிதங்கள் குறித்த எளிதான நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும் என தொழிற் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|