பதிவு செய்த நாள்
07 அக்2020
22:05
புதுடில்லி:சாம்சங், எல்.ஜி., சோனி போன்ற முன்னணி ‘டிவி’ தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய அளவிலான டிவிகளை இறக்குமதி செய்துகொள்ள, மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது.
பண்டிகை காலம் நெருங்கி வரும் சமயத்தில், இறக்குமதிக்கான உரிமம் கிடைத்திருப்பது, அவற்றை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது.மேலே குறிப்பிட்ட இந்த நிறுவனங்கள், உயர்நிலை பிரீமியம் டிவிகளை விற்பனை செய்வதற்கு, இறக்குமதியை மட்டுமே நம்பி உள்ளன.
மேலும் பல நிறுவனங்கள், 55 அங்குலம் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான டிவிகளை, இறக்குமதி செய்தே விற்பனை செய்து வருகின்றன. அண்மையில் மத்திய அரசு, உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் விதமாக, டிவி இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. குறிப்பாக, சீன போன்ற நாடுகளிலிருந்து அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|